பாஜக.,வின் அடையாளமாகும் காவி நிற தொப்பி

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியினர் சிவப்பு நிறத்தொப்பிகளை அணிந்து தங்களுக்கு எனஓர் அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளனர். இது போல் பாஜகவினரும் குஜராத் தேர்தல்பிரச்சாரம் முதல் காவி நிறத் தொப்பி அணிய முடிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய நிகழ்ச்சிகளில் பல்வேறுநிற தலைப்பாகை அணியும்வழக்கம் பாஜக தலைவர்கள் மத்தியில் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையில் சுதந்திரஉரையின் போதும் இவ்வாறு தலைப்பாகை அணிந்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் குஜராத் தேர்தலையொட்டி பிரச்சாரத்தை முன்கூட்டியே தொடங்கும் வகையில் அகமதாபாத்தில் பிரதமர் மோடி அண்மையில் ஊர்வலம் நடத்தினார். அதில் பிரதமர் மோடி தலைப்பாகைக்கு பதிலாக காவி நிறத் தொப்பி அணிந்திருந்தார். இதையடுத்து குஜராத்தில் பிரச்சாரம் செய்யும் பாஜகவினர் காவி நிறத் தொப்பி அணிவது என்ற யோசனை அக்கட்சிக்கு உருவாகி விட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் பாஜக தலைவர்கள் முதல், எம்.பி., எம்எல்ஏ மற்றும் தொண்டர்கள்வரை அனைவரும் காவி நிறத்தொப்பி அணிய முடிவு செய்யபட்டுள்ளது. இதற்காக ஒரேவடிவில், சிறப்புவகை காவித்தொப்பி தயாராகி வருகிறது. கட்சியின் சின்னமாக தாமரை முத்திரையுடன் கூடிய இந்த தொப்பி இனிபாஜகவினரின் அடையாளமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. முதல்கட்டமாக இதை பாஜக எம்.பி.க்கள் அணியஉள்ளனர். இதற்காக கட்சித்தலைமை அவர்களுக்கு 5 தொப்பிகள் உள்ளிட்ட சிலபொருட்களுடன் ஒரு பை அளிக்க உள்ளது. பிறகு படிப்படியாக கட்சி நிர்வாகிகளும் இதனை அணியவுள்ளதாக கூறப்படுகிறது.

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்அமைப்பினர் காவி நிறக் குல்லா அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்போதுகூட அதன் கூட்டங்கள் மற்றும் ஷாக்கா எனப்படும் உடற்பயிற்சி முகாம்களிலும் அவர்கள் தொப்பி அணிகின்றனர். இதுவே தற்போது குஜராத் எம்.பி. ஒருவரின் யோசனையால் சிலமாற்றங்களுடன் பொதுமக்களையும் கவரும் வகையில் அறிமுகமாகிறது.

சுதந்திர போராட்டக் காலங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் வெள்ளை நிறத்தொப்பி அணிவது வழக்கமாக இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகும் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட பெருந்தலைவர்களும் வெள்ளை நிறத்தொப்பி அணிந்தனர். பிறகு இந்த வழக்கம் காங்கிரஸாரிடம் குறைந்து விட்டது. தற்போது ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கட்சியின் முக்கிய சில நிகழ்ச்சிகளில் மட்டும் வெண்ணிற தொப்பி அணிகின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...