ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழாவிற்காக சென்னையில் இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கும் நிலையில் மாலை 6 மணிக்கு நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுமார் 187 நாடுகளைசேர்ந்த 1400க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில், தமிழகஅரசு சார்பில் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தமிழகம்முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழாவிற்காக சென்னையில் இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,” நாளை, ஜூலை 28 மற்றும் நாளை மறுநாள் குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளேன்.

குஜராத்தில் மதியம் சபர் பால்பண்ணையில் ரூ.1000 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறேன். பலஆண்டுகளாக, குஜராத்தில் கூட்டுறவு மற்றும் பால்துறையை வலுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். சபார் பால் பண்ணையில், தூள் ஆலை மற்றும் அசெப்டிக் பால் பேக்கேஜிங் ஆலை திறக்கப்படும். சபார் சீஸ் மற்றும் மோர் உலர்த்தும் ஆலைதிட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்.

நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழாவிற்காக சென்னைக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தியாவிலேயே, அதுவும் செஸ்ஸுடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டிலேயே இது ஒருசிறப்பான போட்டியாகும்.” என கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையா ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையாடல் பிரதமா் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய முதலீடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவ ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவி நீக்கம் செய்ய முடியுமா? திமுகவின் மாஸ்டர் பிளான் திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்காவை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள ...

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது தவறு இண்டிகோவிடம்தான் உள்ளது என்றும், விரைவில் நிலைமை சீராகிவிடும், ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் கிடைத்தது அடித்த அதிர்ஷ்டமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , பிரதமர் நரேந்திரமோடியின் ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.