உலகிலேயே சகிப்புத் தன்மை உள்ள நாடு இந்தியாதான் என சகிப்புத்தன்மை குறித்து துணை ஜனாதிபதி பதவி காலத்தை நிறைவுசெய்த ஹமீது அன்சாரி பேச்சுக்கு மறைமுகமாக துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள வெங்கையாநாயுடு பதிலடி கொடுத்துள்ளார் .
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி தனது பணிகாலம் நிறைவடைந்ததை யடுத்து புதிய துணைஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்க உள்ளார். ஹமீது அன்சாரி இன்று பேசுகையில், பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்களால் தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.
இதுதொடர்பாக வெங்கையா நாயுடு கூறியது, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என சிலர் கூறிவருகின்றனர். இது வெறும் அரசியல் பிரசாரம். உலக அளவில் ஒப்பிடுகையில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு மிக்க நாடாக இந்தியா உள்ளது. அந்த வகையில் உலகிலேயே சகிப்புத்தன்மை உள்ள நாடு இந்தியா தான். ஜனநாயகம் வெற்றியடைந்து வருவதே சகிப்புதன்மை இருப்பதால் தான் என்றார்.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.