ஐக்கிய ஜனதா தளம் 3 பேருக்கு மத்தியமந்திரி பதவி

பீகார் மாநிலத்தில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதாதளத்துடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார். லாலு குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச் சாட்டு எழுந்ததால் நிதிஷ் குமார் அந்த கூட்டணியில் இருந்து விலகினார். பாரதிய ஜனதா தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து அவர் மீண்டும் ஆட்சி அமைத்தார்.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு நிதிஷ்கு மாருக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா அழைப்பு விடுத்தார். இருவர் இடையே நடந்த சந்திப்பின் போது இதைவலியுறுத்தினார்.

இதையேற்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில்சேருகிறது. இதுகுறித்து வருகிற 19-ந்தேதி முடிவு செய்கிறது.

மோடி தலைமையிலான மத்தியமந்திரி சபையிலும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இடம்பெறுகிறது.

மத்திய மந்திரிகள் மீது ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 3 இடங்கள் கொடுக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிஷ்குமாரின் விசுவாசிகளான ஆர்.சி.பி.சிங், ராம்நாத் தாகூர், ஹரிவனிஷ் ஆகிய 3 பேருக்கு மத்தியமந்திரி பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த மூவரும் டெல்லி மேல்-சபை எம்.பி.க்களாக உள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...