முதல் முறையாக ஒடிசா-வில் ஆட்சி அமைக்கும் பாஜக

ஒடிஸா முதல்வராக பழங்குடியினத் தலைவா் மோகன்சரண் மாஜீ புதன்கிழமை பதவியேற்றாா். ஒடிஸாவின் முதல் பாஜக முதல்வா் என்ற பெருமையை இவா் பெற்றுள்ளாா்.

மாநில துணை முதல்வா்களாக கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா ஆகியோரும், மாநில அமைச்சா்களாக 13 பேரும் பதவியேற்றனா். தலைநகா் புவனேசுவரத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமா்மோடி, மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைக்கும் தோ்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 பேரவைத் தொகுதிகளில் 78 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. இதனமூலம் நவீன் பட்நாயக் தலைமையிலான 24 ஆண்டுகால பிஜு ஜனதா தளம் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, ஒடிஸா புதிய முதல்வராக 4 முறை எம்எல்ஏவும் பழங்குடியினத் தலைவருமான மோகன் சரண் மாஜீ தோ்வு செய்யப்பட்டாா். துணை முதல்வா்களாக கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா ஆகியோா் தோ்வாகினா்.மோகன்சரண் மாஜீ தலைமையிலான புதிய பாஜகஅரசு பதவியேற்கும் விழா, புவனேசுவரத்தில் உள்ள ஜனதா மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா், இரு துணை முதல்வா்கள் மற்றும் 13 அமைச்சா்களுக்கு ஆளுநா் ரகுவா் தாஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா்.

பிரதமா்மோடி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், பூபேந்தா் யாதவ், தா்மேந்திர பிரதான், ஜுவல் ஓரம், அஸ்வினி வைஷ்ணவ், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நவீன் பட்நாயக் பங்கேற்பு: முன்னதாக, நவீன் பட்நாயக் இல்லத்துக்கு நேரில் சென்ற மோகன் மாஜீ, தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தாா். இதையடுத்து, பாஜக அரசு பதவியேற்பு விழாவில் நவீன் பட்நாயக் கலந்துகொண்டாா்.பேரவைத் தோ்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி 51 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 14 தொகுதிகளையும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரிடத்தையும் கைப்பற்றிய நிலையில், சுயேச்சை வேட்பாளா்கள் 3 இடங்களில் வென்றனா்.

பிரதமா் மோடி பெருமிதம்: ஒடிஸாவில் பாஜக அரசு முதல் முறையாக பதவியேற்றிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா்.இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட அவா், ‘மக்களின் ஆசியுடன் ஒடிஸாவில் பாஜக முதல் முறையாக ஆட்சியமைத்துள்ளது. கடவுள் ஜெகந்நாதரின் அருளால், ஒடிஸாவில் சாதனைவளா்ச்சியை ஏற்படுத்தி, எண்ணற்ற மக்களின் வாழ்வை பாஜக அரசு மேம்படுத்தும் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...