5.8 டன் எடையுள்ள இலகு ரக ராணுவ ஹெலி காப்டர்களை , இந்துஸ்தான் ஏரோ நாடிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்புதலை, பாதுகாப்புகொள்முதல் கவுன்சில் அளித்துள்ள நிலையில், பெங்களுருவில் ராணுவ ஹெலிகாப்டர் உற்பத்தியை நேற்று, அருண்ஜெட்லி தொடங்கிவைத்தார்.
மேலும் மேம்படுத்தப்பட்ட பயிற்சி போர் விமானமான HAWK-i-ஐயும் நாட்டுக்கு அவர் அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய அருண்ஜெட்லி, தற்போதுள்ள சூழலில் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் என்பதேகூடாது என குறிப்பிட்டார்.
டோக்லாம் விவகாரத்தில் சீனாவுடனான பிரச்னையை மறை முகமாக சுட்டிக்காட்டிய அருண்ஜெட்லி, எதிரிகளிடம் இருந்து இந்தியாவைகாக்க, நாட்டின் அனைத்து வளங்களையும், நமது பாதுகாப்பிற்காக பயன்படுத்தவேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ராணுவ தளவாடங்களுக்காக பிறநாடுகளை சார்ந்திராமல், நம்நாட்டிலேயே உற்பத்தியை பெருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.