நாடாளுமன்ற எம்.பி.க்கள் தூய்மை விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்

நாடாளுமன்ற எம்.பி.க்கள் அனைவரும் தாங்கள் தத்தெடுத்த கிராமங்களில் அடுத்தமாதம் தொடங்கும் தூய்மை விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.


இது தொடர்பாக, நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப் பட்டுள்ளதாவது: கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 15-ஆம் தேதிவரை, தூய்மை விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு நடத்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் தத்தெடுத்த கிராமங்களில் ஊராட்சி அளவில், இந்தப்பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
இந்தப் பிரசாரத்தின்போது, கிராமவாசிகளுக்கு தூய்மை,சுகாதாரம் குறித்து சுய உதவிக்குழுக்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

.
மேலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் நோய்வாய்ப் படுவதைத் தடுக்கவும், பெண் பிள்ளைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்கவும் எம்.பி.க்கள் சிறப்புகவனம் செலுத்தவேண்டும். ஊரகப் பகுதியில் வாழும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். கிராமங்களைத் தூய்மைப் படுத்தும்பணியையும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியையும் எம்.பி.க்கள் தொடங்கிவைக்க வேண்டும்.


கிராமத்தின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், அவற்றை அமல்படுத்துவது குறித்தும், கிராம சபைக்கூட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும். உணவு பதப்படுத்துதல், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை குறித்து கிராம வாசிகளுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும். இதுதவிர, அரசின் திட்டங்கள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் நரேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் நலன் குறித்து முதல்வர் ச ...

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா ? அண்ணாமலை கேள்வி ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்பட ...

இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும் – பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து, பெல்ஜியம் ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இ ...

இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா '' இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,'' என ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்ச ...

தமிழக மீனவர் பிரச்சனை – ஜெய்சங்கர் பதில் '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் ...

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அண்ணாமலை நெகிழ்ச்சி ஏழு இஸ்லாமிய நாடுகள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அர ...

டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு கர்நாடகாவில், நம்ம யாத்ரி என்ற தனியார் டாக்ஸி சேவை ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...