நாடாளுமன்ற எம்.பி.க்கள் தூய்மை விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்

நாடாளுமன்ற எம்.பி.க்கள் அனைவரும் தாங்கள் தத்தெடுத்த கிராமங்களில் அடுத்தமாதம் தொடங்கும் தூய்மை விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.


இது தொடர்பாக, நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப் பட்டுள்ளதாவது: கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 15-ஆம் தேதிவரை, தூய்மை விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு நடத்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் தத்தெடுத்த கிராமங்களில் ஊராட்சி அளவில், இந்தப்பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
இந்தப் பிரசாரத்தின்போது, கிராமவாசிகளுக்கு தூய்மை,சுகாதாரம் குறித்து சுய உதவிக்குழுக்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

.
மேலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் நோய்வாய்ப் படுவதைத் தடுக்கவும், பெண் பிள்ளைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்கவும் எம்.பி.க்கள் சிறப்புகவனம் செலுத்தவேண்டும். ஊரகப் பகுதியில் வாழும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். கிராமங்களைத் தூய்மைப் படுத்தும்பணியையும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியையும் எம்.பி.க்கள் தொடங்கிவைக்க வேண்டும்.


கிராமத்தின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், அவற்றை அமல்படுத்துவது குறித்தும், கிராம சபைக்கூட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும். உணவு பதப்படுத்துதல், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை குறித்து கிராம வாசிகளுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும். இதுதவிர, அரசின் திட்டங்கள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் நரேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...