நாடாளுமன்ற எம்.பி.க்கள் தூய்மை விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்

நாடாளுமன்ற எம்.பி.க்கள் அனைவரும் தாங்கள் தத்தெடுத்த கிராமங்களில் அடுத்தமாதம் தொடங்கும் தூய்மை விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.


இது தொடர்பாக, நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப் பட்டுள்ளதாவது: கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் 15-ஆம் தேதிவரை, தூய்மை விழிப்புணர்வு பிரசாரத்தை மத்திய அரசு நடத்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் தத்தெடுத்த கிராமங்களில் ஊராட்சி அளவில், இந்தப்பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
இந்தப் பிரசாரத்தின்போது, கிராமவாசிகளுக்கு தூய்மை,சுகாதாரம் குறித்து சுய உதவிக்குழுக்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் ஆகியவற்றின் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

.
மேலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் நோய்வாய்ப் படுவதைத் தடுக்கவும், பெண் பிள்ளைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்கவும் எம்.பி.க்கள் சிறப்புகவனம் செலுத்தவேண்டும். ஊரகப் பகுதியில் வாழும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். கிராமங்களைத் தூய்மைப் படுத்தும்பணியையும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியையும் எம்.பி.க்கள் தொடங்கிவைக்க வேண்டும்.


கிராமத்தின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், அவற்றை அமல்படுத்துவது குறித்தும், கிராம சபைக்கூட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும். உணவு பதப்படுத்துதல், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை குறித்து கிராம வாசிகளுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும். இதுதவிர, அரசின் திட்டங்கள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் நரேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...