டெங்கு காய்ச்சலைத் தமிழக அரசு உடனடியாகக் கட்டுப்படுத்தவேண்டும்

டெங்கு காய்ச்சலைத் தமிழக அரசு உடனடியாகக் கட்டுப்படுத்தவேண்டும்''  எனத் தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக பி.ஜே.பி. சார்பில், சென்னை டி.பி.சத்திரம் அருகே உள்ள காமராஜர்நகரில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டது.  அதில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நில வேம்புக் கஷாயம் வழங்கிப்பேசிய டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், ''தமிழகத்தில் டெங்குகாய்ச்சல் அதிகமாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் டெங்குகாய்ச்சல் மற்றும் வி‌ஷக்காய்ச்சல் இருக்கிறது. தமிழக அரசு இதை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும். சாதாரண மருத்துவ மனைகளில் கூட காய்ச்சல் வார்டுகளைத் தொடங்கவேண்டும்.

தனியார் மருத்துவ மனைகளிலும் டெங்குகாய்ச்சல் மற்றும் வி‌ஷக்காய்ச்சல் வார்டுகள் தொடங்கப்பட வேண்டும். தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறினாலும், இப்போது உள்ள நோயின் வீரியத்துக்குப் போதுமானதாக இல்லை. டெங்குகாய்ச்சலுக்கு சுகாதாரமின்மையே காரணம். உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்குகாய்ச்சல் அதிக அளவில் பரவக்காரணம். டெங்குக் காய்ச்சலை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொண்டு வரவேண்டும். பொதுமக்களும் காய்ச்சல்வந்தால் இரண்டு மூன்று நாள்களில் குணமாகிவிடும் என்று இருந்துவிடாமல், ஆரம்ப நிலையிலேயே அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும்'' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...