மருத்துவவிசா கிடைக்க மனிதாபிமான அடிப்படையில் உதவி :

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் நலனைகாக்க பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். அதேபோல் இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை வைத்து கொள்ளாவிட்டாலும், அந்நாட்டவருக்கு மருத்துவவிசா கிடைக்க மனிதாபிமான அடிப்படையில்   உதவிவருகிறார்.

இந்நிலையில், நசீம் அக்தர் என்ற பாகிஸ்தான் பெண்ணின் மகன், தனதுதாய் இந்தியாவில் சிகிச்சை பெற விசா வழங்க உதவிசெய்யும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதேபோல், ஷபீர் அகமதுஷா என்பவரின்மகன் அலி அசதுல்லாவும், தனதுதந்தைக்கு விசா கிடைக்க உதவும்படி கேட்டிருந்தார். இருவரும் இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்வதற்காக விசா கேட்டிருந்தனர்.

இதையடுத்து ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மா ஸ்வராஜ், ‘‘உங்கள்தாய்க்கு விசா வழங்க இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை அறிவுறுத்திஇருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும், “உங்கள் (அலி அசதுல்லா) தந்தையின் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கு விசாவழங்க இந்திய தூதரகத்திடம் கூறியிருக்கிறோம். நீங்கள் அங்குஅணுகவும்” என்று பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் பைசலாபாத்தைசேர்ந்த எம்.மொசீன் என்பவர், தனதுஉறவினர் பர்சானா இஜாஸ் என்பவர் மிகவும் கவலைக் கிடமான நிலையில் இருக்கிறார். அவருக்கு இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்ய விசா வழங்க உதவவேண்டும் என்று சுஷ்மாவுக்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைபார்த்த சுஷ்மா ஸ்வராஜ், பர்சானாவுக்கு மருத்துவவிசா வழங்க அறிவுறுத்தி உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...