எல்கே.அத்வானி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார்

பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு நேற்று (புதன்கிழமை) 90-வது பிறந்த தினமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் அவர்தன் பிறந்த தினத்தை உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு அவரது மனைவி கமலா மரணம் அடைந்ததால் அத்வானி தனதுபிறந்த நாளை கொண்டாடவில்லை.

இந்த ஆண்டு அவரது பிறந்த நாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாட அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர். அவர்கள் மத்தியில் எல்கே.அத்வானி பிறந்த நாளைக் கொண்டாடினார்.

பா.ஜ.க. மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். பிறகு அவர் பிரிதிவிராஜ் சாலையில் உள்ள தன்வீட்டுக்கு பார்வையற்ற குழந்தைகளை வரவழைத்து இருந்தார்.

90 பார்வையற்ற சிறுவர்- சிறுமியருடன் அமர்ந்து அவர் காலைஉணவு சாப்பிட்டார். இதன் மூலம் அத்வானி தொடர்ந்து உற்சாகமாக இருப்பதை உறுதி படுத்தியுள்ளார்.

அத்வானிக்கு, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

‘இந்த இனிய நாளில் நீங்கள் நல்ல உடல்நலம் பெற்று நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தி க்கிறேன். கடின உழைப்புமூலம் இந்த நாட்டுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர் அத்வானி.

இவ்வாறு அதில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

எல்.கே.அத்வானி தனது மனைவி இறந்ததால் சிலமாதங்கள் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். பா.ஜ.க. நிகழ்ச்சிகளிலும்கூட அவர் பங்கேற்கவில்லை.

ஆனால் கடந்த தீபாவளி தினத்தன்று வாரணாசி சென்று 90 தீபங்களை ஏற்றிவழிபட்டார். அன்று முதல் மீண்டும் அவர் உற்சாகமாக தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...