மருத்துவ சிகிச்சை: 3 பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க சுஷ்மா உத்தரவு

இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 9 வயது சிறுமி உள்பட 3 பாகிஸ் தானியர்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.


பாகிஸ்தானைச் சேர்ந்த தானிஷ் மேமன் என்பவர், ரத்த அழிவுசோகை நோயால் பாதிக்கப்பட்ட தனது 9 வயது மகள் மரியாவுக்கு இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்காக விசாவேண்டி விண்ணப்பித்திருந்தார்.


இதையடுத்து, சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டுள்ள பதிவில், 'மரியா தானிஷ் … உங்களுக்கான விசாவை உடனடியாக வழங்கும்படி நான் பாகிஸ் தானிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையே, தனதுதந்தை சிகிச்சை பெறுவதற்காக இந்திய விசாகேட்டு விண்ணப்பித்திருந்த மரியம் ஆசிம் என்பவருக்காக சுஷ்மா வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், 'தகுந்த ஆவணங்களுடன் பாகிஸ்தானிலுள்ள இந்தியத்தூதரகத்தை அணுகவும். உங்களுக்கான விசாக்கள் உடனடியாக வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுதவிர, மருத்துவ விசாவுக்காக விண்ணப் பத்திருந்த ஃபரிஹா உஸ்மான் என்ற மற்றொரு பாகிஸ்தான் பெண்ணுக்கும் விசா வழங்கப் படுவதை சுஷ்மா ஸ்வராஜ் தனது சுட்டுரைப் பதிவு மூலம் உறுதிப்படுத்தினார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...