கறுப்புபண ஒழிப்பு மூலம் நாட்டை காப்பாற்றியுள்ளது பாஜக

பணமதிப்பு நீக்கம், கறுப்புபண ஒழிப்பு மூலம் நாட்டை காப்பாற்றியுள்ளது பாஜக அரசு என மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். 

துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டுவிழா சென்னை ஆழ்வார் பேட்டை மியூசிக் அகடமியில் நடைபெற்று வருகிறது. இந்தவிழாவில் கலந்துகொண்டு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, புத்தகங்களை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். 

மூத்த பத்திரிக்கையாளர் சோ விட்டுசென்ற பணிகளை குருமூர்த்தி போன்ற சிலரால் மட்டுமே கையாளமுடியும். ஊழல் ஒழிப்புக்கான மிகமுக்கிய நடவடிக்கைதான் பணமதிப்பு நீக்கம். கடினமான மனநிலையில்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பணமதிப்பு நீக்கம், கறுப்புபண ஒழிப்பு மூலம் நாட்டை பாஜக அரசு காப்பாற்றியுள்ளது. ஒருகுடும்பமே நாட்டை ஆட்சி செய்து கைப்பற்றி வைத்திருந்தது. மோடி ஆட்சிக்குமுன் இருந்த அரசு மக்களுக்கு உதவாத அரசாகவே இருந்தது. 

பிரதமரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரித்துள்ளது. நாட்டின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. 

பொருளாதார வளர்ச்சி பட்டியலில் 7-வது இடத்தில் இருந்தஇந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பொருளாதாரத்தில் நாடு வேகமாகவளர்ந்து வருகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் சமூக, பொருளாதார கட்டமைப்பில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும்.

நாட்டில் எதிர்புணர்வை தூண்டுவது சிலசூழ்ச்சி சக்திகள் தான். நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என குரல் கொடுப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது என ஜேட்லி தெரிவித்தார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...