தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் கீழ் 90.76 சுய உதவிக்குழுக்களாக ஒருகிணைத்துள்ளது

கடைக்கோடி மக்களுக்கும் உள்ளடக்கிய வாழ்வாதாரத்தை வழங்கும் அரசின் உறுதிப்பாட்டை ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் ஊரக வாழ்வாதாரத் துறை கூடுதல் செயலாளர் சரண்ஜித் சிங் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

புதுதில்லியில் நேற்று (11.07.2024) நடைபெற்ற வறுமை ஒழிப்பு குறித்த மாநாட்டில் சரண்ஜித் சிங் பேசினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க அரசு பாடுபட்டு வருகிறது என்று அவர் கூறினார்.

ஏழைப்பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை களைய  வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் கூறினார். இத்தகைய சவால்களை அடையாளம் கண்டு தீர்க்கவும் உள்ளூர் நிலைகள் குறித்த புரிதல் இன்றியமையாதது என்று அவர் குறிப்பிட்டார். தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மேற்கொள்ளும் புதுமையான நடவடிக்கைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார். வறுமையை ஒழித்து கடைசிநிலையில் உள்ள மக்களுக்கும் அரசுத் திட்டங்களின் பலன்கள் சென்றடைய அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று அவர் கூறினார்.

தீனதயாள் அந்தியோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் 10.04 கோடி பெண்களை                                90.76 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களாக திரட்டியுள்ளது என்று சரண்ஜித் சிங் தெரிவித்தார். இது நிதி உள்ளடக்கம், டிஜிட்டல் கல்வியறிவு, நிலையான வாழ்வாதாரங்கள், சமூக மேம்பாட்டு அம்சங்களை ஊக்குவிக்கிறது என்று அவர் கூறினார். தீனதயாள் அந்தியோதயா திட்ட  தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் முக்கிய அம்சமாக மகளிருக்கான வாழ்வாதார மேம்பாடு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...