பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சர்வதேசளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதுதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல்விலை இப்போது உயர்ந்துள்ளதற்குக் காரணம். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் இதற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்றும் நம்புகிறோம். அதேநேரத்தில் மாநில அரசுகளும் பெட்ரோலியப் பொருள்களுக்கு விதிக்கும் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.