மத்திய அரசின் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றுமா தமிழக அரசு

நாட்டின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி தினத்தன்று, மக்களுக்கு,
தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு, மக்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் வழங்கும் தீபாவளி பரிசு என பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா அவர்கள் கூறியுள்ளார். மத்திய அரசின் இம்முடிவினால் விலைவாசியும் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு தாம் வரியைக் குறைத்ததோடு நில்லாது, , மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்து, நுகர்வோருக்கு ஏற்பட்டிருக்கும் சுமையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு எல்லா மாநிலத்தையும் கேட்டுக் கொண்டுள்ளது.

நம் மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் உத்தரவைப் தொடர்ந்து, பாஜக ஆளும் பல அரசுகளும் இதைப் பின்பற்றி, மாநில அரசின் பெரும் பங்கான வாட் வரியை உடன் குறைத்து உத்தரவிட்டனர்.

இதன்படி புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை ₹ 7-8 ரூபாயும் & டீசல்விலையை ₹ 9-10 ரூபாயும், குறைத்து உத்தரவிட்டது. புதுச்சேரி அரசு இந்த வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 ரூபாய் 85 காசும், டீசல் விலை 19 ரூபாயும் குறையும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 1 லிட்டர் பெட்ரோல் 94 ரூபாய் 92 காசுகளாகவும் டீசல் 83 ரூபாய் 57 காசுகளாகவும் குறைந்துள்ளது.

இதர பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் மாநிலங்களான கர்நாடகா, குஜராத், கோவா, திரிபுரா, மணிப்பூர், அசாம் ஆகிய மாநில அரசுகளில் ₹7 ரூபாயும், உத்தரபிரதேச மாநில அரசில் ₹12 ரூபாயும், உத்தரகாண்ட் மாநில அரசில் ₹2 ரூபாயும் மாநில அரசின் வாட் வரியில் குறைத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் நம் தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்த திமுக அரசு, மாநில அரசு வரியை குறைக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது, பிறகு தேர்தல் சமயத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்பதாக வாக்குறுதி கொடுத்தது.

இப்போது மத்திய அரசு தங்களுடைய பங்கிலே பெட்ரோலுக்கு ஐந்து ரூபாயும் டீசலுக்கு பத்து ரூபாயும் குறைத்திருக்கும்போது, மற்ற மாநில அரசுகள் மக்களின் வரிச் சுமையை குறைத்திருக்கும்போது, தமிழக அரசு தன் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

மாநில அரசு தங்கள் பங்கை குறைக்க முன் வந்தால்தான் குறைப்பதாக கட்டியம் கூறிய தமிழக அரசு இன்னும் மௌனம் சாதிப்பது ஏன்?. தமிழக அரசு தீபாவளி பரிசாக மக்கள் வரிச் சுமையை குறைக்க முன்வருமா? அப்படி குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ள மத்திய அரசின் வேண்டுகோளை நிறைவேற்றுமா? அல்லது வழக்கம் போல் நாடகங்களில் ஈடுபடுவார்களா?

பெட்ரோல், டீசல் விற்பனையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பது பொது மக்களின் நீண்டகால கோரிக்கையாகும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வருவாயை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் பல்வேறு மாநில அரசுகள் வாகன எரிபொருள் விற்பனை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எனவே பெட்ரோல், டீசல் தற்போதைக்கு ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இருப்பினும் மத்திய அரசின் தற்போதைய விலை குறைப்பு நடவடிக்கை, பொதுமக்களுக்கு பண்டிகை காலத்தில் வழங்கப்படும் ஆறுதலாக, நிவாரணமாக இருக்கும். தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி K. அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சித் தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...