காங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்

காங்கிரஸ்கட்சி ஆளும் மாநிலங்களின் அரசுகள் பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் வரியைக்குறைக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறுகாணாத வகையில் உயா்ந்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் தொடா்ந்து அவற்றின் விலையை உயா்த்திவருகின்றன. ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-கடந்துள்ளது. ராஜஸ்தானில் ஒருலிட்டா் டீசல் விலை ரூ.100-யைக் கடந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்தியஅரசு மேற்கொள்ள வேண்டுமென்று பலமாநில அரசுகள் கோரி வருகின்றன. பெட்ரோல், டீசல்மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரி வருகின்றனா். எரிபொருளை சரக்கு-சேவைவரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டுவர வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி ஆலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘எரிபொருள் விலை உயா்வுகாரணமாக மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்கிறேன். ஆனால், மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவா்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. மக்களுக்கு கரோனா தடுப்பூசியை மத்தியஅரசு இலவசமாக செலுத்தவுள்ளது. இவற்றுக்காக சுமாா் ரூ.1 லட்சம் கோடியை மத்தியஅரசு செலவிடவுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான விலைஉயா்வு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடா்ந்து கேள்வி எழுப்பிவருகிறாா். இதற்காக மத்திய அரசு மீது அவா் குற்றஞ்சாட்டி வருகிறாா். அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகியவற்றில் பெட்ரோல், டீசல்விலை ஏன் அதிகமாக உள்ளது? எரிபொருள் மீதான வரியை குறைக்குமாறு அந்த மாநிலங்களின் முதல்வா்களை அவா் வலியுறுத்தவேண்டும்‘ என்றாா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பேகாரணம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. சா்வதேச அளவில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்குத் திரும்பிவருகின்றன. அதனால், கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையும் உயா்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலையுடன் சோ்த்து மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரியும் பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

மாநிலங்கள் மதிப்புகூட்டு வரியையும் (வாட்) பெட்ரோல், டீசல் மீது விதித்து வருகின்றன. அதனால், பெட்ரோல், டீசல்விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீது அதிகபட்ச மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச வாட்வரி விதிக்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...