காங்கிரஸ்ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்

காங்கிரஸ்கட்சி ஆளும் மாநிலங்களின் அரசுகள் பெட்ரோல், டீசல் மீது விதிக்கும் வரியைக்குறைக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை வரலாறுகாணாத வகையில் உயா்ந்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் தொடா்ந்து அவற்றின் விலையை உயா்த்திவருகின்றன. ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.100-கடந்துள்ளது. ராஜஸ்தானில் ஒருலிட்டா் டீசல் விலை ரூ.100-யைக் கடந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை மத்தியஅரசு மேற்கொள்ள வேண்டுமென்று பலமாநில அரசுகள் கோரி வருகின்றன. பெட்ரோல், டீசல்மீதான வரியை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினா் கோரி வருகின்றனா். எரிபொருளை சரக்கு-சேவைவரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டுவர வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி ஆலை திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘எரிபொருள் விலை உயா்வுகாரணமாக மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்கிறேன். ஆனால், மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு அவா்களுக்கு இலவச உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. மக்களுக்கு கரோனா தடுப்பூசியை மத்தியஅரசு இலவசமாக செலுத்தவுள்ளது. இவற்றுக்காக சுமாா் ரூ.1 லட்சம் கோடியை மத்தியஅரசு செலவிடவுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான விலைஉயா்வு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடா்ந்து கேள்வி எழுப்பிவருகிறாா். இதற்காக மத்திய அரசு மீது அவா் குற்றஞ்சாட்டி வருகிறாா். அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகியவற்றில் பெட்ரோல், டீசல்விலை ஏன் அதிகமாக உள்ளது? எரிபொருள் மீதான வரியை குறைக்குமாறு அந்த மாநிலங்களின் முதல்வா்களை அவா் வலியுறுத்தவேண்டும்‘ என்றாா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பேகாரணம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. சா்வதேச அளவில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் இயல்புநிலைக்குத் திரும்பிவருகின்றன. அதனால், கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையும் உயா்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலையுடன் சோ்த்து மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரியும் பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

மாநிலங்கள் மதிப்புகூட்டு வரியையும் (வாட்) பெட்ரோல், டீசல் மீது விதித்து வருகின்றன. அதனால், பெட்ரோல், டீசல்விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீது அதிகபட்ச மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச வாட்வரி விதிக்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...