எப்போதும் காஷ்மீரும், அதன் மக்களும் நம்முடையவர்கள்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய எல்லையில் பாக்., தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்திவருகிறது. எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே உள்ள ரஜவுரி மாவட்டத்தில், குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாக்., ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது.

பாக்.,கின் இந்த தொடர் தாக்குதல்கள் குறித்து சட்டீஸ்கரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 3, 4 நாட்களுக்கு முன்பு பாக்., அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் போது, இனி எல்லை தாண்டிய தாக்குதல் நடக்காது என நமது எல்லை பாதுகாப்புபடை டிஜி.,யிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதை மீறி மீண்டும் தாக்குதல் நடத்திவருகின்றனர். நான் அது பற்றிய அதிகம் பேசவில்லை. ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். எங்களின் அமைதிக்கும், கண்ணியத்திற்கும் ஒருஎல்லை உண்டு. நாங்கள் அனைவருடனும் நல்லுறவை பேண விரும்புகிறோம். அதற்காக எங்களின் கண்ணியத்தை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்.

இந்தியா ஒருபோதும் பலவீனமான நாடல்ல. இந்தியா தற்போது பலமான நாடாக உருவாகி உள்ளது. இதற்கு முன் இருந்ததை விட தற்போது காஷ்மீரில் இயல்பு நிலை வந்துள்ளது. நமது பாதுகாப்புப்படையும், ராணுவமும் அதற்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றன. காஷ்மீர் நம்முடையது. எப்போதும் காஷ்மீரும், அதன் மக்களும் நம்முடையவர்கள் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...