கோவா மாநிலத்தில் சட்ட விரோத சுரங்கதொழில்கள் குறித்து பொதுகணக்கு குழு தனது அறிக்கையை சட்டசபையில் தாக்கல்செய்துள்ளது. இந்தஅறிக்கை கோவா மாநில அரசியல்வாதிகளுக்கு சட்ட விரோத சுரங்கதொழில் மோசடியில்
தொடர்பிருப்பதை அம்பலபடுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து முதல்வர் திகம்பர்காமத் அரசுக்கு சிக்கல் உருவாகியுள்ளது .
இது குறித்து பொது கணக்கு குழுவின் தலைவர் மனோகர்பாரிகர் தெரிவிக்கையில் ,
இந்த சுரங்கமோசடியில் உள்ளுர் அதிகாரிகள், போலீஸ்அதிகாரிகள், அரசியல் வாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது . கடந்த 2010-2011-ம்ஆண்டில் 56லட்சத்து 56 ஆயிரத்து 450டன் இரும்புதாதுக்கள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்க பட்டுள்ளன. இதன் மூலம் கிட்ட தட்ட ரூ.120கோடி அரசுக்கு நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார் .
சுரங்கமோசடியினால் அம்மாநில முதல்வர் திகம்பர்காமத்திற்கு சிக்கல் உருவகியுள்ளது. இதுகுறித்து சிபிஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
{qtube vid:=JBubimMr1hY} {qtube vid:=ncD19Wx3xD8}
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
Leave a Reply
You must be logged in to post a comment.