கார்த்தி சிதம்பரம் தன்னிடம் ரூ.6. 5 கோடி கேட்டார்; இந்திராணி

ஐ.என்.எக்ஸ் மீடியாவழக்கில் மாஜி நிதி அமைச்சரின் மகன் கார்த்திசிதம்பரம் தன்னிடம் ரூ.6. 5 கோடி கேட்டார் என சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணையின் போது இந்திராணி கூறினார். இருவரையும் ஒன்றாகவைத்து நடத்தப்பட்ட விசாரணையில் கார்த்தி சிதம்பரம் பதில் ஏதும் கூறமுடியாமல் திணறினார்.


கடந்த 3 நாட்களாக காவலில்வைத்து சிபிஐ அதிகாரிகள் துருவிதுருவி கார்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திராணியை அழைத்து இரு வரிடமும் அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

ஐ.என்.எக்ஸ்., மீடியாவுக்கு அன்னிய முதலீட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுதர கார்த்திசிதம்பரம் 3.5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கார்த்திசிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்தவழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

 

இந்நிலையில், கார்த்தியை டில்லியிலிருந்து மும்பை அழைத்துவந்த சிபிஐ அதிகாரிகள், சிறையில் உள்ள இந்திராணி முன்னிலையில் அவரிடம் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணிநேரம் நடந்த அப்போது இந்திராணி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் பலகேள்விகளை எழுப்பினர். இதற்காக பல ஆதாரங்களையும் காட்டினர்.

 

இதுதொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், விசாரணையில் இந்திராணி பல்வேறு வாக்கு மூலங்களை அளித்துள்ளார். அதன்படி

* ஹயாட் ஓட்டலில் கார்த்தியை சந்தித்தேன்.
* 1 மில்லியன் அமெரிக்கடாலர் (6. 5 கோடி ) பணம் வேண்டும் என கார்த்தி கேட்டார்.
* 3.5 கோடி ரூபாய் பணம் டிபாசிட் செய்யப் பட்டு விட்டதாக தெரிவித்தேன்.
* பணம் எவ்வாறு கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் இந்திராணி விளக்கினார்.
இதுபோன்ற குற்றச்சாட்டை நேரிடையாக இந்திராணி வைத்ததால் கார்த்தி சிதம்பரத்திற்கு பெரும்நெருக்கடி ஏற்பட்டது. பதில் ஏதும் சொல்ல முடியாமல் திணறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...