நான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் தலைமையில் 7 எதிர்க் கட்சிகள், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கடந்த வெள்ளிக் கிழமை நோட்டீஸ் கொடுத்தன. இதை கடந்த திங்கட் கிழமை அவர் நிராகரித்தார். இது அவசரகதியில் எடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்நிலையில் பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் நிராகரத்ததற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் உச்சநீதிமன்ற வக்கீல்கள் 10 பேர், வெங்கையா நாயுடுவை நேற்று சந்தித்தனர். அவர்களிடம் வெங்கையாநாயுடு கூறியதாவது:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது எதிர்க் கட்சிகள் பதவி நீக்கதீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியான திலிருந்து கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்தவிஷயத்தில் அனைத்து விதிமுறைகள், நடைமுறைகள், முன்மாதிரிகள் ஆகியவற்றை நான் நன்கு ஆராய்ந்தேன். இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. நான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன். இதற்கு பாராட்டு தேவைஇல்லை. மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில் என்னிடம் எதிர் பார்க்கப்பட்ட பணியை நான் சிறப்பாக செய்துள்ளேன் என்றார்.

இந்தவிவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘‘பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர வலுவான ஆதாரம்தேவை. வதந்திகள், காதால் கேட்கப்பட்டவை எல்லாம் ஆதாரங்களுக்கு மாற்றாக இருக்கமுடியாது. அடிப்படை ஆதாரமில்லாமல் இந்த பதவி நீக்கதீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்தபேட்டியில், ‘‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் கொடுத்தது தவறு.இந்த நோட்டீஸ் கொடுக்கவேண்டாம் என சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் கூறினேன். பதவிநீக்க தீர்மானத்துக்கு நாங்கள் அதரவு தெரிவிக்கவில்லை. நீதித்துறையில் தலையிட எங்கள் கட்சி விரும்பவில்லை’’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...