நான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் தலைமையில் 7 எதிர்க் கட்சிகள், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கடந்த வெள்ளிக் கிழமை நோட்டீஸ் கொடுத்தன. இதை கடந்த திங்கட் கிழமை அவர் நிராகரித்தார். இது அவசரகதியில் எடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கை என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்நிலையில் பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் நிராகரத்ததற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் உச்சநீதிமன்ற வக்கீல்கள் 10 பேர், வெங்கையா நாயுடுவை நேற்று சந்தித்தனர். அவர்களிடம் வெங்கையாநாயுடு கூறியதாவது:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது எதிர்க் கட்சிகள் பதவி நீக்கதீர்மானம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியான திலிருந்து கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்தவிஷயத்தில் அனைத்து விதிமுறைகள், நடைமுறைகள், முன்மாதிரிகள் ஆகியவற்றை நான் நன்கு ஆராய்ந்தேன். இது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. நான் எனது பணியை திருப்தியாக செய்துள்ளேன். இதற்கு பாராட்டு தேவைஇல்லை. மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில் என்னிடம் எதிர் பார்க்கப்பட்ட பணியை நான் சிறப்பாக செய்துள்ளேன் என்றார்.

இந்தவிவகாரம் தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘‘பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர வலுவான ஆதாரம்தேவை. வதந்திகள், காதால் கேட்கப்பட்டவை எல்லாம் ஆதாரங்களுக்கு மாற்றாக இருக்கமுடியாது. அடிப்படை ஆதாரமில்லாமல் இந்த பதவி நீக்கதீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அளித்தபேட்டியில், ‘‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பதவிநீக்க தீர்மான நோட்டீஸ் கொடுத்தது தவறு.இந்த நோட்டீஸ் கொடுக்கவேண்டாம் என சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் கூறினேன். பதவிநீக்க தீர்மானத்துக்கு நாங்கள் அதரவு தெரிவிக்கவில்லை. நீதித்துறையில் தலையிட எங்கள் கட்சி விரும்பவில்லை’’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...