இப்படியும் ஒரு நீதிபதியா?

“பலரும் வெள்ளைக்கார நீதிபதிகள்” மனநிலையில் இருக்கும்போது, இப்படியும் ஒரு நீதிபதியா? என வியக்க வைத்த மாண்புமிகு நீதிபதி,
வாழ்க..! நீதித்துறை..!
நீதித்துறையின் மணிமகுடம்..!

ஒரு நீதிபதியின் கடிதம் : வாசியுங்கள்

04-07-2022
” அன்பான வழக்கறிஞர்களே,

ஓரிரு நாட்களுக்கு முன், எனது நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடத்திக் கொண்டிருந்த வழக்கறிஞரிடம் அவ்வழக்கை 4.00 மணிக்கு எடுத்துக்கொள்வதாகச் சொன்னேன். அதற்கு அந்த வழக்கறிஞர் சற்று தயக்கத்தோடு ” நான்கு மணிக்கு வேண்டாம்… தயவுகூர்ந்து நாளை விசாரியுங்கள்” என்றார். ஆச்சரியமடைந்த நான் இன்று 4.00 மணிக்கே அவ்வழக்கை விசாரிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றேன். அதற்கு அவர் ” 3.30 மணிக்கு எனது குழந்தையை நான் பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வரவேண்டும், எனவே நீங்கள் 4 மணிக்கு வழக்கை எடுத்தால் எனக்கு தோதாக இருக்காது என்றார். அவரது சூழலை முழுமையாக உணர்ந்த நான் அவரது வேண்டுகோளுக்கு இணங்கினேன்.

இந்த நிகழ்வு எனது சிந்தனையை மேலும் ஆழமாகத் தூண்டியது.

என்னுடைய நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களான பல இளம் தாய்மார்களும் பிராக்டீஸ் செய்கிறார்கள். அவர்களுக்கும் இதே போல் பிரச்சனைகள் இருக்கலாம். அவர்களையும் சிரமங்களின்றி எனது நீதிமன்றத்தில் வழக்கு நடத்த அனுமதிப்பது எனது கடமை என்று உணர்கிறேன்.

எனவே அத்தகைய இளம் வழக்கறிஞர்கள் தங்களது வசதியான நேரத்தை முன்கூட்டியே தெரிவித்து அந்த நேரத்தில் எனது நீதிமன்றத்தில் அவர்களது வழக்கை நடத்தலாம். இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இப்படிக்கு,
நீதிபதி. G.R.சுவாமிநாதன்
தமிழ் மொழி பெயர்த்த வழக்கறிஞருக்கு நன்றிகள்..!

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...