கர்நாடக பா.ஜ.க தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மடாதிபதிகளை பற்றி முதல்மந்திரி குமாரசாமி தவறாக பேசுகிறார். முடிந்தால் அரசியலுக்கு வந்துபாருங்கள் என்று அவர்களுக்கு சவால்விடுக்கிறார். இதன் மூலம் மடாதி பதிகளையும், அவர்களை பின்பற்றும் பக்தர்களையும் குமாரசாமி புண்படுத்தி விட்டார். நான், குமாரசாமியை பார்த்து கேட்கிறேன், நீங்கள் எத்தனை தொகுதிகளில் வெற்றிபெற்று இருக்கிறீர்கள்?.
உங்கள் கட்சி 149 தொகுதிகளில் டெபாசிட் இழந்து விட்டது. இது பற்றி உங்களுக்கு தெரியுமா?. மக்கள் உங்களை நிராகரித்து விட்டனர். சித்தராமையா தயவால் நீங்கள் முதல்மந்திரி ஆகி இருக்கிறீர்கள். ஆனால் பதவி ஏற்புவிழாவில் சித்தராமையாவை, நீங்கள் (குமாரசாமி) அவமானப் படுத்தி விட்டீர்கள். இது அவர் சார்ந்துள்ள குருப சமூகமக்களை அவமானப் படுத்தியது போல் ஆகும். இது உங்களுக்கு நல்லதல்ல.
மோடியின் வெற்றியை தடுத்து விட்டதாக, நீங்கள் சொல்கிறீர்கள். வெறும் 37 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள உங்களுக்கு(குமாரசாமி), பிரதமர் மோடியை பற்றிபேச தகுதி இருக்கிறதா?. உங்களுக்கு அதிகாரதிமிர். அந்த அதிகாரம் தலைக்கு ஏறிவிட்டது. அதனால்தான் எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் பற்றி பேசுகிறீர்கள்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.