150 தொகுதிகளில் தாமரையை மலரவைப்பது தான், அடுத்த இலக்கு

-”தமிழகத்தில், 2026ல் நடக்கும் சட்ட சபை தேர்தலில், 150 தொகுதிகளில் தாமரையை மலரவைப்பது தான், அடுத்த இலக்கு,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

தமிழகத்தில் இருந்து தேர்வாகி பணியாற்றிவரும், மத்திய அரசு வாரிய இயக்குனர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான கலந்துரை யாடல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.கூட்டத்தில், வாரியதலைவர்கள், ஆலோசனை குழு உறுப்பினர்கள், இயக்குனர்கள், அரசு வழக்கறிஞர்கள் என, 333 பேர் பங்கேற்றனர்.

அதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:தமிழகத்தில் தாமரைமலராது என, விமர்சிக்கப்பட்ட நிலையில், முருகன் முயற்சியால், நான்கு தொகுதிகளில் தாமரை மலர்ந்தது. வரும் 2026 சட்ட சபை தேர்தலில் 150 தொகுதிகளில் தாமரை மலரவேண்டும் என்பதுதான், பா.ஜ., வின் அடுத்த இலக்கு.மத்திய அரசின் வாரியபதவிகளை சுமையாக கருதக்கூடாது; இனிய அனுபவமாக கருதி பணியாற்ற வேண்டும். துறை சார்ந்த புத்தகங்களை படித்து, துறை வளர்ச்சிக்கு உத்வேகத்துடன் செயல்படவேண்டும்.

வாரிய பதவிகள் வாயிலாக, பொதுமக்கள் பயன் அடையவேண்டும். கட்சியினர் உற்சாகம் பெற வேண்டும். கட்சிவளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தொண்டர்களுக்கு வழிகாட்டவேண்டும்.பிரதமர் மோடியை போல, நாம் நுண்ணறிவுடன் பணியாற்றி, கட்சிக்கு பெருமைசேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...