வழக்கத்துக்கு மாறாக டெபாசிட்வரவில்லை: நாபார்டு வங்கி விளக்கம்

பணமதிப்புநீக்கத்தின்போது அமகதாபாத் மாவட்ட கூட்டுறவுவங்கியில் வழக்கத்துக்கு மாறாகச் செல்லாத ரூபாய் நோட்டுகள் ஏதும் டெபாசிட் செய்யப்பட வில்லை. கே.ஒய்.சி விதிமுறைப்படியே அனைத்தும் நடந்தது என்று நபார்டுவங்கி விளக்கம் அளித்துள்ளது.

குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பண மதிப்பு நீக்கத்தின் போது செல்லாத ரூ.500 ரூ.1000 நோட்டுகள் வழக்கத்துக்கு மாறாக ஏதும் டெபாசிட் செய்யப்பட வில்லை. ரிசர்வ் வங்கியின் கேஒய்சி விதிப்படியே பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

அகமபாதாப் மாவட்ட கூட்டுறவு வங்கியில் மொத்தம் 17 லட்சம் கணக்குதாரர்கள் உள்ளனர். அதில் 1.6 லட்சம் வாடிக்கையாளர்கள் சராசரியாக ரூ.46ஆயிரத்து 795 டெபாசிட் செய்தனர். ஒட்டுமொத்த கணக்கு தாரர்களில் 9.37 சதவீதம் வாடிக்கையாளர்களே செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில்கொடுத்து மாற்றினார்கள்.

98.94 சதவீதம் வாடிக்கையாளர்கள் ரூ.2.5 லட்சத்துக்குக் குறைவாகவே டெபாசிட் செய்தனர் மற்றும் செல்லாத ரூபாய்களைக் கொடுத்து பரிமாற்றம்செய்தனர். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை 1.60 லட்சம் வாடிக்கையாளர்கள் மூலம் ரூ.746 கோடி டெபாசிட் வந்தது உண்மைதான். இது வங்கியின் டெபாசிட்களில் 15சதவீதம் மட்டுமே. இந்தடெபாசிட்கள் அனைத்தும் விதிமுறையின்படியே நடந்துள்ளது.

குஜராத்தில் உள்ள கூட்டுறவுவங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்களைக் காட்டிலும், மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட் தான் அதிகமாகும்.

அகமதாபாத் மாவட்டகூட்டுறவு வங்கியில் வர்த்தக அளவு என்பது ரூ.9 ஆயிரம் கோடியாகும். நாட்டில் உள்ள மாவட்ட கூட்டுறவுவங்கிகளில் முதல் 10 இடங்களில் இந்தவங்கி இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த வங்கிக்குச் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஆதலால், வங்கியில் செய்யப்பட்டடெபாசிட்கள் விதிமுறைப்படியே நடந்துள்ளன.

இவ்வாறு நபார்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...