கூட்டுறவு சங்க எதிர்காலம் பிரகாசமாக உள்ளது – அமித்ஷா

குஜராத்தின், ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் பொன்விழா ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

பிரதமர் மோடியின் ஆட்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டதில் இருந்து, 60க்கும் அதிகமான புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளில், சேவை கூட்டுறவு சங்கங்கள், முதன்மை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உட்பட, இரண்டு லட்சம் முதன்மை கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மோடி ஆட்சியில், கூட்டுறவு சங்கங்களின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. முதன்மை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத ஒரு பஞ்சாயத்து கூட, நாட்டில் இருக்க கூடாது என்ற நிலை ஏற்பட வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் மலிவு விலை மருந்தகங்களை திறக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பெட்ரோல் பங்க்குகள், சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோக ஏஜென்சி அமைக்கவும் ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மானிய விலையில் தானியங்களை வினியோகிப்பதிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தரமான விதைகள், ஏற்றுமதி மற்றும் இயற்கை வேளாண்மைக்கு தலா ஒன்று என மூன்று தேசிய கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் உள்ளூர் கூட்டுறவு சங்கங்கள் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவ ...

பிஹாரில் காட்டாட்சி திரும்புவதை மக்கள் விரும்ப வில்லை பிஹார் சட்டப் பேரவைத்தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...