ஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அவரதுதந்தை கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் இருவரும் ஒன்றாக கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்ற சுவாரசியவரலாறு குறித்து காணலாம்.

இந்திய மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், மறைந்த முன்னாள் பிரதமரும் ஆன வாஜ்பாய், 1946-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள டி.ஏ.வி. கல்லூரியில் சேர்ந்து எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார்.

பின்னர் 1948-ம் ஆண்டு அதே கல்லூரியில் வாஜ்பாயும், அவரது தந்தையும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான கிருஷ்ண பிகாரி வாஜ்பாயும் சேர்ந்து ஒன்றாக சட்டம்பயின்றனர். டி.ஏ.வி. கல்லூரி விடுதியின் 104வது அறையில் இருவரும் சேர்ந்து தங்கியவாறு கல்லூரிக்கு சென்றனர். தந்தை, மகன் இருவரும் ஒன்றாக வகுப்புக்குசெல்வது இருவருக்கு உள்ளேயும் சங்கடத்தை ஏற்படுத்த, இனி ஒன்றாக வகுப்புக்கு செல்ல வேண்டாம் என இருவரும் முடிவெடுத்தனர். அதன்படி வாஜ்பாய் திங்கள் கிழமை வகுப்புக்கு சென்றால், அவரது தந்தை செவ்வாய்க்கிழமை வகுப்புக்குசெல்வார்.

தந்தை, மகன் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே கல்லூரியில் படிப்பது அப்போதைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரிய பேச்சுப் பொருளாக இருந்தது என்று டி.ஏ.வி. கல்லூரியின் முதல்வர் மனவேந்திரா ஸ்வர்ப் கூறியுள்ளார்.

மேலும் இணை-பேராசிரியர் விஜய் பிரதாப்சிங் கூறுகையில், அரசியல் அறிவியல்துறையின் தலைவர் மதன் மோகன் பாண்டேவுடன், வாஜ்பாய் மிகவும் நெருக்கமாக இருந்தார். வாய்பாய் எப்போதும் அவரை குருஜி என்றே அழைப்பார். வகுப்புகள் முடிந்தபிறகு, அவரது வீட்டிற்கு சென்று ஏராளமான சமூகபிரச்சனைகள் குறித்து அவருடன் ஆலோசனை செய்வார் என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...