வாஜ்பாய் கண்ணியமிக்க அரசியல் வாதி

கட்சியின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, அதனையே எப்போதும் எதிரொலித்தவர் வாஜ்பாய் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் புகழாரம் சூட்டினார். 
வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல்தெரிவித்து நடைபெற்ற புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது: 


நாட்டின் தலைசிறந்தப் பேச்சாளராகவும், காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமராகவும் வாஜ்பாய் விளங்கினார். மிகச்சிறப்பு வாய்ந்த கவிஞராகவும், மனித நேயம் கொண்ட வராகவும் திகழ்ந்தார். கடந்த 1985-1990ஆம் ஆண்டு கால கட்டத்தில் பாஜக வெறும் 2 எம்.பி.க்களை மட்டுமே பெற்று மிகமோசமான நிலையில் இருந்தது. ஆனால், வாஜ்பாய் எங்களுக்கு வழிகாட்டியதுடன், ஊக்கமளித்து, கடின உழைப்பை செலுத்தியதால் ஆட்சியை பிடிக்கமுடிந்தது.
அவர் கண்ணியமிக்க கட்சிப் பணியாளராகவும் விளங்கினார். கட்சித்தலைமை ஏதாவது முடிவை எடுத்தால், அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார். 


கட்சியின் குரலையே எப்போதும் எதிரொ லித்தார். தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் மூலம் சாலைகளையும், உள்அழைப்புகளுக்கான கட்டணத்தை இலவசமாக்கி தொலை தொடர்புகளையும் இணைத்தார். விமான நிலையங்கள், நதிகள் ஆகியவற்றையும் இணைக்க தொடர்ந்து பணியாற்றினார். சிலநதிகளை இணைத்து நாட்டு மக்களின் தாகம் தீர்த்தார். அவர் அனைத்து மொழிகள் மீதும் அளவற்ற அன்பினை கொண்டிருந்தார். 


இதனால், அந்தமொழிகள் செழுமை பெற்றன. கொள்கை ரீதியாக மாற்றுக் கட்சியினருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களை பெரிதும் மதித்தார். ஒரு போதும் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கியது இல்லை. மிகவும் கண்ணியமிக்க அரசியல் வாதியாக திகழ்ந்தார் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...