வாஜ்பாய் கண்ணியமிக்க அரசியல் வாதி

கட்சியின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, அதனையே எப்போதும் எதிரொலித்தவர் வாஜ்பாய் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் புகழாரம் சூட்டினார். 
வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல்தெரிவித்து நடைபெற்ற புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது: 


நாட்டின் தலைசிறந்தப் பேச்சாளராகவும், காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமராகவும் வாஜ்பாய் விளங்கினார். மிகச்சிறப்பு வாய்ந்த கவிஞராகவும், மனித நேயம் கொண்ட வராகவும் திகழ்ந்தார். கடந்த 1985-1990ஆம் ஆண்டு கால கட்டத்தில் பாஜக வெறும் 2 எம்.பி.க்களை மட்டுமே பெற்று மிகமோசமான நிலையில் இருந்தது. ஆனால், வாஜ்பாய் எங்களுக்கு வழிகாட்டியதுடன், ஊக்கமளித்து, கடின உழைப்பை செலுத்தியதால் ஆட்சியை பிடிக்கமுடிந்தது.
அவர் கண்ணியமிக்க கட்சிப் பணியாளராகவும் விளங்கினார். கட்சித்தலைமை ஏதாவது முடிவை எடுத்தால், அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார். 


கட்சியின் குரலையே எப்போதும் எதிரொ லித்தார். தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் மூலம் சாலைகளையும், உள்அழைப்புகளுக்கான கட்டணத்தை இலவசமாக்கி தொலை தொடர்புகளையும் இணைத்தார். விமான நிலையங்கள், நதிகள் ஆகியவற்றையும் இணைக்க தொடர்ந்து பணியாற்றினார். சிலநதிகளை இணைத்து நாட்டு மக்களின் தாகம் தீர்த்தார். அவர் அனைத்து மொழிகள் மீதும் அளவற்ற அன்பினை கொண்டிருந்தார். 


இதனால், அந்தமொழிகள் செழுமை பெற்றன. கொள்கை ரீதியாக மாற்றுக் கட்சியினருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களை பெரிதும் மதித்தார். ஒரு போதும் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கியது இல்லை. மிகவும் கண்ணியமிக்க அரசியல் வாதியாக திகழ்ந்தார் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.