வாஜ்பாய் கண்ணியமிக்க அரசியல் வாதி

கட்சியின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, அதனையே எப்போதும் எதிரொலித்தவர் வாஜ்பாய் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் புகழாரம் சூட்டினார். 
வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல்தெரிவித்து நடைபெற்ற புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது: 


நாட்டின் தலைசிறந்தப் பேச்சாளராகவும், காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமராகவும் வாஜ்பாய் விளங்கினார். மிகச்சிறப்பு வாய்ந்த கவிஞராகவும், மனித நேயம் கொண்ட வராகவும் திகழ்ந்தார். கடந்த 1985-1990ஆம் ஆண்டு கால கட்டத்தில் பாஜக வெறும் 2 எம்.பி.க்களை மட்டுமே பெற்று மிகமோசமான நிலையில் இருந்தது. ஆனால், வாஜ்பாய் எங்களுக்கு வழிகாட்டியதுடன், ஊக்கமளித்து, கடின உழைப்பை செலுத்தியதால் ஆட்சியை பிடிக்கமுடிந்தது.
அவர் கண்ணியமிக்க கட்சிப் பணியாளராகவும் விளங்கினார். கட்சித்தலைமை ஏதாவது முடிவை எடுத்தால், அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார். 


கட்சியின் குரலையே எப்போதும் எதிரொ லித்தார். தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் மூலம் சாலைகளையும், உள்அழைப்புகளுக்கான கட்டணத்தை இலவசமாக்கி தொலை தொடர்புகளையும் இணைத்தார். விமான நிலையங்கள், நதிகள் ஆகியவற்றையும் இணைக்க தொடர்ந்து பணியாற்றினார். சிலநதிகளை இணைத்து நாட்டு மக்களின் தாகம் தீர்த்தார். அவர் அனைத்து மொழிகள் மீதும் அளவற்ற அன்பினை கொண்டிருந்தார். 


இதனால், அந்தமொழிகள் செழுமை பெற்றன. கொள்கை ரீதியாக மாற்றுக் கட்சியினருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களை பெரிதும் மதித்தார். ஒரு போதும் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கியது இல்லை. மிகவும் கண்ணியமிக்க அரசியல் வாதியாக திகழ்ந்தார் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குங்குமப்பூ விவசாயம் செய்யும் ...

குங்குமப்பூ விவசாயம் செய்யும் இளைஞரை பாராட்டிய பிரதமர் மோடி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி-யை அடுத்த மலவயல் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பச்சைக்கொடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் த ...

பிரதமர் மோடியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடியை, டில்லியில் உள்ள ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படை ...

பாகிஸ்தானுக்கு பதிலடி ; முப்படைகளுக்கு முழு சுதந்திரம் – பிரதமர் மோடி உறுதி ல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தருவதற்கான உயர்மட்ட ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அ ...

கல்வியை நவீனபடுத்தும் மத்திய அரசு – பிரதமர் மோடி பெருமிதம் நாட்டின் எதிர்காலத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த கல்வி முக்கிய பங்காற்றுகிறது. ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார ...

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கனடா பார்லிமென்ட்டிற்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...