கேள்விகேட்க ராகுலுக்கு உரிமையில்லை

காங்கிரஸ் கட்சியின், ஒருகுடும்பத்தின் 60 ஆண்டுக்கால ஆட்சிகுறித்து ராகுல் காந்தி பதில் அளிக்க கடமைப்பட்டவர். ஆனால், மோடியின் அரசை குறித்து கேள்விகேட்க அவருக்கு உரிமையில்லை என்று பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா கடுமையாகச் சாடியுள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. ராஜ் நந்த்கான் மாவட்டத்தில் உள்ள குருபாத் கிராமத்தில் இன்று நடந்த தேர்தல் 2-வது கட்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு பிரதமர் மோடியின் 4 ஆண்டுக்கால ஆட்சி குறித்து கேள்விகேட்க எந்தவித உரிமையும் இல்லை. கடந்த 60 ஆண்டுகளாக ராகுலின் குடும்பத்தினர் தான் நாட்டை ஆண்டிருக்கிறார்கள். ஆனால்,ஏன் பெரும்பாலான கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்க வில்லை.

விவசாயிகளுக்கு ஏன் குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைக்க வில்லை. மற்ற நலத்திட்டங்கள் ஏதும் கிடைக்கவில்லை. 60 ஆண்டுகளாக என்ன விதமான ஆட்சியை நடத்தினீர்கள் என்று மக்கள் உங்களிடம் கேள்வி கேட்கிறார்கள். அந்தக் கேள்விக்கு பதில்சொல்ல வேண்டிய பொறுப்பு ராகுல் காந்திக்கு இருக்கிறது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள், ஏழைப்பெண்கள், குடும்பத்தார் அனைவருக்கும் இலவசமாக ஸ்மார்ட் போன் அரசு செலவில் வழங்கப்பட உள்ளது. ஏறக்குறைய 45 லட்சம்பேர் இதில் பலனடைவார்கள்.

நான் காங்கிரஸ் கட்சியின் இளவரசரின் பேச்சை கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளாக மோடி என்ன நாட்டுக்கு செய்தார் என்று கேள்வி கேட்கிறார். இந்த கேள்வியைக் கூடகேட்க ராகுலுக்கு உரிமையில்லை. மக்கள் தான் உங்களின் குடும்பத்தின் ஆட்சி குறித்து கேள்வி கேட்க நினைக்கிறார்கள்.

நிலக்கரி ஊழலில் மிகப்பெரிய கொள்ளையை காங்கிரஸ் அரசு செய்துள்ளது,

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...