காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை, புரோக்கர்களும், வாரிசுகளும் ஆட்டிப்படைத்தனர் -அமித் ஷா

‘காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா அரசை,புரோக்கர்களும்,வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர்,’ என மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா பேசினார்.

ஹரியானாவில் வரும் அக்.,5ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ரிவாரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

ஹரியானாவில், பா.ஜ., வெற்றி பெற்றால், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) மற்றும் ஒரே பதவி-ஒரே ஓய்வூதியத்தின் மூன்றாம் பகுதி ஆகிய நன்மைகளை பெற்றுதருவோம். 40 ஆண்டுகளாக, ராணுவத்தினரின் கோரிக்கையான, ஒரே பதவி, திட்டத்தை காங்கிரசால் அமல்படுத்த இயலவில்லை.ஆனால், பிரதமர் மோடி, 2014 தேர்தல் பிரசாரத்தில் கூறியபடி, ஒரே பதவி-ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தினார். இத்திட்டத்தின் மூன்றாவது பகுதியையும் அமல்படுத்தி உள்ளோம்.

முந்தைய காங்கிரஸ் அரசு கொள்ளை, கமிஷன் மற்றும் ஊழலை மட்டுமே செய்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் புரோக்கர்களும், வாரிசுகளும் தான் ஆட்டிப்படைத்தனர். குறைந்த பட்ச ஆதார விலை என்றால் என்ன, காரிப் மற்றும் ரபி பயிர்கள் குறித்து காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியுமா? காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை அளிக்காமல் அக்கட்சி ஏமாற்றி விட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...