மல்லையாவை இயக்குவது யாரோ?

இந்தச் சர்ச்சைகளே 2019 லோக் சபா தேர்தலுக்கு தயார் படுத்திக் கொள்வதற்கான ஒருபகுதியே. மல்லையா ஒரு பொய்யர், அவர் கூறிய ஒருவார்த்தை அருண் ஜேட்லியை பிரச்சினைக் குள்ளாக்கியது. லண்டன் செல்லும் முன் அருண் ஜேட்லியைச் சந்தித்து செட்டில் செய்வதாக கூறியதாக தெரிவித்தார்.

மல்லையா போன்ற ஒருபொய்யரின் கூற்றை வைத்துக்கொண்டு எந்த அடிப்படையில் அருண் ஜேட்லியை சந்தேகிக்க முடியும். காங்கிரஸ்தான் அதை செய்தது. சில ஆயிரம்கோடி ரூபாய்கள் வங்கிக்கடனை மோசடி செய்து விட்டு லண்டனில் நாடுகடுத்தும் வழக்கை சந்தித்துவருகிறார்.

வாராக்கடன்களில் சிக்கிய வங்கிகளின் எண்ணிக்கை 16. இந்த வங்கிகளிலிருந்து கடன்பெற்றவர்கள் அனைவரும் பண முதலைகள். இதில் மல்லையாவும் ஒருவர்.

அவர் கடனைத் திருப்பித்தருகிறேன் என்று கூறியதை வங்கிகள் ஏற்கவில்லை, இதனையடுத்து அருண் ஜேட்லியை மாநிலங்களவைக்கு வெளியே சந்தித்துள்ளார், ஒரு எம்.பியாக அங்குசுற்ற அவருக்கு உரிமை உள்ளது. இதை வைத்துக்கொண்டு அருண் ஜேட்லியையும் குற்றவாளி என்று காங்கிரசின் பூனியா கூறுவது முழுதும் முட்டாள்தனமானது.

கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஏமாற்றியது மல்லையா மட்டுமல்ல, இன்று பல எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூடத் தான் நிரவ் மோடி தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தற்போது செய்திகள் வெளியாகின்றன. எனவே ராகுல் காந்திதான் நிரவ் மோடி தப்பிக்கக் காரணம் என்று கூற முடியுமா?

இவ்வளவு ஆண்டுகள் கழித்து மல்லையா இதனை தெரிவிக்கிறார், ஜேட்லி-மல்லையா சந்திப்பு முன்னரே தெரியுமென்றால் காங்கிரஸ் ஏன் இத்தனை நாட்களாக வாயை மூடி கொண்டிருந்தது?

அல்லது மல்லையாவின் பின்னால் யாரோ அவரை இயக்கி இத்தகையகூற்றுகள் அவரிடமிருந்து வருகிறதா? இவையெல்லாமே 2019 தேர்தலுக்கான தயாரிப்புகளே. விரும்ப தகாதவர்களை நீக்கி விடுவதற்கான முயற்சி, இப்போது ஜேட்லிக்கு இதுநடந்துள்ளது.

போபர்ஸ் ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட குவாட்ரோக்கி காங்கிரஸ், சிபிஐ உதவியில்லாமல் தப்பியிருக்க முடியுமா?

நன்றி சாம்னா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...