யதார்த்த உண்மைகளை உங்களால் மாற்ற முடியாது

ரஃபேல் ஒப்பந்தம், 15 தொழிலதிபர்களின் கடன்தள்ளுபடி என ஒவ்வொரு விஷயத்திலும், கோமாளியைப் போல் ராகுல் காந்தி தொடர்ந்து பொய்கூறி வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வந்தபோது, வாராக்கடன் தொகை, ரூ.2.5 லட்சம் கோடியாக இருந்தது காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், உண்மைகளை அவர்கள் மூடிமறைத்து விட்டனர். மேலும், கடன் சீரமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களின் கீழ் நிதி மோசடியாளர்கள் காப்பாற்றப் பட்டனர்.


கடந்த 2015-ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சொத்து தரமதிப்பீட்டுக் குழு, வாராக் கடன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அப்போது தான், நாட்டின் உண்மையான வாராக்கடன் ரூ.8.96 லட்சம் கோடி என்று தெரிய வந்தது.
இந்த வாராக் கடன் அதிகரிப்புக்கு தற்போதைய மத்திய அரசு காரணமல்ல. மேலும், வாராக் கடனை வசூலிப்பதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்தவொரு ஆக்கப் பூர்வமான நடவடிக்கையையும் எடுக்க வில்லை. வங்கியில் வாங்கப்பட்ட கடனுக்கு முறையாக தவணை தொகைகள் செலுத்தப்பட வேண்டும். 90 நாள்களுக்கு மேல் கடன்நிலுவை செலுத்தப்படா விட்டால், அந்தக்கடன் வாராக்கடனாகக் கருதப்படும். மோசடியாளர்களின் சொத்துகளை ஏலம்விட்டு கடன் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, வங்கி திவால் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், 12 முக்கிய கடனாளிகளை ரிசர்வ்வங்கி கண்டறிந்துள்ளது. பல்வேறு வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடன் நிலுவை, வட்டியுடன் சேர்த்து ரூ.3 லட்சம் கோடியாக கணக்கிடப் பட்டுள்ளது. இந்நிலையில், ராகுல்காந்தி தொடர்ந்து பொய் கூறுவதால், யதார்த்த உண்மைகளை அவரால் மாற்ற முடியாது

நன்றி மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...