திறந்த வெளியில் காங்கிரசுடன் விவாதம் நடத்த தயார்

பாஜக ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகுறித்து திறந்த வெளியில் காங்கிரசுடன் விவாதம் நடத்த தயார் என்று பாஜக தேசியதலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற வுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தின் கான்கேர் மாவட்டத்தில் உள்ள நர்கார் பூரில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசியதாவது-

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிசெய்துள்ளது. ஆனால் பாஜக வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே ஆட்சிபுரிந்துள்ளது. இதில் யார் அதிக வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறித்து திறந் வெளியில் விவாதம் நடத்த காங்கிரஸ் கட்சி தயாரா?. மாநிலத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணம் சென்று முதல்வர் ராமன்சிங் மக்களை சந்தித்துள்ளார். ஆனால் மாநிலத்திற்கு காங்கிரஸ் அரசு எதையுமே செய்ய வில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய்தான் சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்கினார். ராமன் சிங் தான் இதனை வளர்ச்சி பெறச்செய்தார்.

மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகமக்களும் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ராமன் சிங்கால் பலன் பெற்றுள்ளனர். மாநிலத்தை வளர்ச்சி பெறச்செய்ததில் மத்தியில் ஆளும் மோடி அரசு முதல்வர் ராமன் சிங்குக்கு உறுதுணையாக இருந்தது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.இந்தாண்டு இறுதியில் சத்தீஸ்கர் மாநில தேர்தல் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...