நாடு முழுவதும் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது

மறைந்த காவலர்களை நினைவு கூரும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இன்று நாடு முழுவதும் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்  படுகிறது.
லடாக் பகுதியில் 1959-ம் ஆண்டு சீன படையினரால் கொல்லப்பட்ட காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள காவலர் நினைவிடத்தில், பிரதமர் நரேந்திரமோடி மலர்வளையம் வைத்து மரியாதைசெலுத்தினார். அவரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் அத்வானி ஆகியோரும் மரியாதை செலுத்தினர். இதேபோல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காவலர் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.

 

 வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரை யாற்றினார். "நாட்டுக்காக உழைப்பதில் காவலர்கள் மட்டுமின்றி நில நடுக்கம், வெள்ளம், தீவிபத்து உள்ளிட்ட பேரிடர் மீட்பு பணியின் போது சிறப்பாக செயல்படும் தேசிய – மாநில பேரிடர் மீட்புப்படையினரின் பங்களிப்பும் அபாரமானது. அவர்களும் நமது வீரம்மிக்க காவலர்கள்தான்" என அவர் குறிப்பிட்டார்.

"இத்தகைய வீரர்களின் தீரத்தைமட்டுமின்றி, அர்ப்பணிப்புணர்வு, தியாகம் ஆகியவற்றை நம் நாடு என்றும் மறந்துவிடாது. தீவிபத்து, கட்டிடவிபத்து, வெள்ளப்பெருக்கில் இருந்து நம்மை காப்பாற்றியவர்கள் யார்? என்பது காப்பாற்றப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கே தெரியாது" என உணர்ச்சி மேலோங்க கூறிய மோடி, இந்த ஆண்டில் இருந்து பேரிடர்காலத்தில் சிறப்பாக சேவையாற்றும் வீரர்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரால் தேசிய விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி மாதம் 23ம் தேதி இந்த விருதுக்கு தேர்வானவர்களின் பெயர்கள் அறிவிக்க படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "இந்திய சுதந்திரபோராட்ட நிகழ்வில், இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி, பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக யுத்தம்தொடுத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பை எவரும் குறைத்துமதிப்பிட முடியாது. அதுமட்டுமின்றி நம் நாட்டின் ஒற்றுமையைக் கட்டிக்காத்திடும் வகையில், பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். நமது அரசு கடினமான மற்றும் பெரிய முடிவுகளை எடுக்கும் அளவுக்கு உறுதியுடன் உள்ளது. இதுதொடரும். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கோ அல்லது நேதாஜி குறித்து ஆதாரங்களை வெளியிடுவதோ, எதுவாக இருந்தாலும் அவை குறித்து உறுதியான முடிவை இந்தஅரசு தொடர்ந்து எடுத்திடும்" என்று அவரது உரையில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...