திரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வுக்கு வெற்றிகிடைக்க வேண்டும்

திரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வுக்கு வெற்றிகிடைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பாரதிய ஜனதா, நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரசின் ஜனநாயக விரோத முறைக்கு சரியானபதில், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே. ஜனநாயகத்திற்கு தகவல் மற்றும் விழிப்புணர்வு ஆகியவை முக்கியம். காங்கிரஸ் மற்றும் அதன் அபாயகரமான விளை யாட்டு குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.தேர்தலுக்கு முன்னர் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம்குறித்து கேள்வி எழுப்பி, அதன்மீது சந்தேக பார்வையை எழுப்ப முயற்சிப்பார்கள். ஆனால், தேர்தலுக்கு பின்னர், காங்கிரஸ் வெற்றிபெற்றால், எந்திரங்களை ஏற்றுக் கொள்வார்கள்.

ராணுவம், சிஏஜி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் காங்கிரஸ் அவமான படுத்தியுள்ளது. சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் வழங்கியதீர்ப்பை அக்கட்சி விரும்பாத காரணத்தினால், அதுகுறித்து கேள்வி எழுப்பியது. முன்னர், கோர்ட்டை மிரட்டியதுடன் மட்டுமல்லாமல், பதவிநீக்கம் செய்யப்போவதாக கூறி அச்சுறுத்தியது.அவசரகால நிலையை பிரகடனப்படுத்திய காங்கிரஸ் கட்சி இப்போது பாரதிய ஜனதா,வை குறை கூடுகிறது.

திரிபுரா மாநிலத்தை போன்று தமிழகத்திலும் பாரதிய ஜனதா., வெற்றி பெற வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தை கட்டிகாப்பவர்கள் மக்களதான். இதனால், காங்கிரஸ்., தந்திரத்தால் அதை அழிக்கபார்க்கிறது.

ஜனநாயக்தை உதாசீனப்படுத்திவந்த காங்கிரஸ் கட்சி., தற்போது மத்திய அரசு மீது குறைசொல்கிறது. பாஜவை வலுப்படுத்த சம்பந்தப்பட நிர்வாகிகள் தங்களின் பூத் பகுதிக்கு சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும்.

இளைஞர்கள், முதியோர், பெண்கள் போன்ற அனைத்து தரப்பு மக்களிடமும் நமது அரசின் சாதனைகளை கொண்டு செல்ல, நமது பாரதிய ஜனதா காரிய கர்த்தாக்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களுடனான தொடர்புகளை அதிகரிக்க வேண்டும்.பிரதம மந்திரியின் வீடு திட்டங்கள், மருத்துவ காப்பீட்டு திட்டங்கள், காதல் சுகாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை நமது பூத்தில் உள்ள மக்கள் ஒவ்வொருவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும். மத்திய அரசு சாமானியனின் நன்மைக்காகவே கடுமையாக உழைக்கிறது என்பதை எடுத்து சொல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...