பீகார் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்தது

பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. பீகாரில் லோக்சபா தேர்தலில் யாருக்கு எத்தனை இடங்கள் என்று பேச்சுவார்த்தையில் முடிவு செய்யபட்டுள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்போதே பாஜக தயாராகிவருகிறது. இதில் பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மிக முக்கியமான மாநிலங்களாக பார்க்கப்படுகிறது. இவை இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 120 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன

பாஜக பீகாரில் மிகவும் வலுவான கட்சியாகும். பீகாரில் மொத்தம் 40 லோக்சபா இடங்கள் உள்ளது. சென்றமுறை 2014ல் நடந்த தேர்தலில் பாஜக அங்கு 40க்கு 31 இடங்களை வென்று சாதனை படைத்தது. உத்தர பிரதேசம் போலவே பாஜக இங்கு அதிக தொகுதிகளை வெல்வதில் குறியாக உள்ளது.

பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜக, நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி பார்ட்டி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்கான பேச்சு வார்த்தையில் கூட்டணி உடன்படிக்கை எட்டப்பட்டது. அதன்படி பீகாரில் உள்ள 40 லோக்சபா இடங்களில் 17 இடங்களில் பாஜக போட்டியிட உள்ளது. 17 இடங்களில் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிட உள்ளது. 6 இடங்களில் லோக் ஜனதாசக்தி போட்டியிட இருக்கிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமித் ஷா வெளியிட்டார். காங்கிரஸ் கூட்டணி பாஜக.,வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று இருந்த ராஷ்டிரிய லோக்சமதா பார்ட்டி (ஆர்எல்எஸ்பி ) அந்த கூட்டணியில் இருந்து ஏற்கனவே விலகி விட்டது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...