பிரதமராகும் கனவில் இருக்கும் சிறுவன்

நாட்டின் பிரதமராகும் கனவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நிறுத்திகொள்ள வேண்டும் என்று பாஜக பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா கிண்டல் செய்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம், கிருஷ்ணாநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:

அடுத்த பிரதமராகும் கனவில், சிறுவன் (ராகுல்காந்தி) உள்ளார் என்பது நமக்குதெரியும். அந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது. நாட்டின் பிரதமராக நரேந்திரமோடியே மீண்டும் பதவியேற்பார். நாட்டின் பிரதமர்களாக இதுவரை இருந்தவர்களில், பிரதமர் மோடிதான் மிகவும் சிறந்தவர். 2019ஆம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் அவர் பிரதமராவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதனால், பிரதமராகும் கனவை ராகுல்காந்தி நிறுத்தி கொள்ள வேண்டும்.

மேற்குவங்கத்தில் ஆட்சியிலிருக்கும் திரிணமூல் காங்கிரஸ் அரசு, வாக்குவங்கிக்காக ஊடுருவல் காரர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இந்தசலுகைகள் அனைத்தும், நமது நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டியவை. அவை அனைத்தும் ஊடுருவல்காரர்களுக்கு செல்கிறது. நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட வேண்டிய ஊடுருவல்காரர்களுக்கு, சலுகைகளை திரிணமூல் காங்கிரஸ் அளிப்பது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும்.

திரிணமூல் காங்கிரஸ் அரசு, ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் அனைத்து எல்லைகளையும் மீறி விட்டது. இதனால் தான், மாநிலம் முழுவதும் ஜனநாயகத்தை காப்போம் என்றபெயரில் பேரணி நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால், சந்தேகத்தின் அடிப்படையில், அந்தபேரணிக்கு அனுமதியளிக்க மாநில அரசு மறுத்துவிட்டது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...