திமுகவும்…நமதே! திகாரும்…நமதே!

திமுகவும்…நமதே! திகாரும்…நமதே! காங்கிரஸ் கூட்டணியில் உங்கள் சாதனையையும் மக்கள் மறக்க வில்லை என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அமமுகவில் இருந்துவிலகிய கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 14-ந்தேதி சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில்சந்தித்து திமுக-வில் தன்னை இணைத்து கொண்டார்.

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா நேற்று கரூரில் நடந்தது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்றார். மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், 103 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சிசெய்கிறார். இதற்கு மோடி காரணமாக இருக்கிறார். ‘மோடி தன்னை மன்னராக நினைத்துவருகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தன் மனதில் தன்னை கடவுளாக நினைத்து கொண்டு இருக்கிறார்.

வரும் தேர்தலில் அதிமுக, பாஜக தமிழகத்தில் எந்த பகுதிக்குச் சென்றும் ஓட்டுக்கேட்க முடியாது. மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள். அடுத்தமுறை மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு 50 ஆண்டுகள பின்னோக்கி சென்று விடும்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்டபஞ்சாயத்து செய்கிறார் மோடி, மாநில அரசு கிரிமினல் கேபினன்ட், மத்திய அரசு பொலிடிக்கல் புரோக்கர் என்ற அவர், மோடி மற்றும் எடப்பாடி அரசை வீட்டிற்கு அனுப்புவதுதான் நமது கடமை. நாடும் நமதே நாற்பதும் நமதே என்று கூறினார்.

இந்நிலையில் இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனது டிவிட்டர் பதிவில், நாடும்நமதே நாற்பதும் நமதே! என்று கனவு காணும் ஸ்டாலின் அவர்களே! ஊழல் சர்க்கார் நமதே!

ஊழலுக்கான சர்க்காரியா கமிஷனும் நமக்கே என்று நடந்த திமுக ஊழல் ஆட்சியை மக்கள் மறக்கவில்லை! திமுகவும்…நமதே! திகாரும்…நமதே! என்று கடந்த காங்கிரஸ்கூட்டணியில் உங்கள் சாதனையையும் மக்கள் மறக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...