திமுகவும்…நமதே! திகாரும்…நமதே!

திமுகவும்…நமதே! திகாரும்…நமதே! காங்கிரஸ் கூட்டணியில் உங்கள் சாதனையையும் மக்கள் மறக்க வில்லை என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அமமுகவில் இருந்துவிலகிய கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 14-ந்தேதி சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில்சந்தித்து திமுக-வில் தன்னை இணைத்து கொண்டார்.

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா நேற்று கரூரில் நடந்தது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்றார். மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், 103 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சிசெய்கிறார். இதற்கு மோடி காரணமாக இருக்கிறார். ‘மோடி தன்னை மன்னராக நினைத்துவருகிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தன் மனதில் தன்னை கடவுளாக நினைத்து கொண்டு இருக்கிறார்.

வரும் தேர்தலில் அதிமுக, பாஜக தமிழகத்தில் எந்த பகுதிக்குச் சென்றும் ஓட்டுக்கேட்க முடியாது. மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள். அடுத்தமுறை மோடி ஆட்சிக்கு வந்தால் நாடு 50 ஆண்டுகள பின்னோக்கி சென்று விடும்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்டபஞ்சாயத்து செய்கிறார் மோடி, மாநில அரசு கிரிமினல் கேபினன்ட், மத்திய அரசு பொலிடிக்கல் புரோக்கர் என்ற அவர், மோடி மற்றும் எடப்பாடி அரசை வீட்டிற்கு அனுப்புவதுதான் நமது கடமை. நாடும் நமதே நாற்பதும் நமதே என்று கூறினார்.

இந்நிலையில் இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனது டிவிட்டர் பதிவில், நாடும்நமதே நாற்பதும் நமதே! என்று கனவு காணும் ஸ்டாலின் அவர்களே! ஊழல் சர்க்கார் நமதே!

ஊழலுக்கான சர்க்காரியா கமிஷனும் நமக்கே என்று நடந்த திமுக ஊழல் ஆட்சியை மக்கள் மறக்கவில்லை! திமுகவும்…நமதே! திகாரும்…நமதே! என்று கடந்த காங்கிரஸ்கூட்டணியில் உங்கள் சாதனையையும் மக்கள் மறக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...