ராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்றை பூசிக்கொண்டுள்ளார்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேரம் பேசியுள்ளதாக, மத்திய சட்டத்து றை அமைச்சர் ரவிசங்கர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:

இந்தியா – பிரான்ஸ் இடையே ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பே, இந்த ஒப்பந்தம் தனக்குக் கிடைக்கப்போகிறது என்று தொழிலதிபர் அனில் அம்பானி அறிந்திருந்தார் என்பதை மின்னஞ்சல் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கருக்குக்கூட தெரியாத சில தகவல்கள், ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே அனில் அம்பானிக்குத் தெரிந்திருக்கிறது. இது அரசுப்பணிகள் தொடர்பான ரகசியம்காக்கும் சட்டத்துக்கு எதிரான செயலாகும். இதற்காகவே மோடியை சிறையில் அடைக்கலாம் என்று கூறியிருக்கும் ராகுல், மோடி ஒருவரால்மட்டுமே இந்த ஒப்பந்தம் பற்றி அம்பானியிடம் சொல்லியிருக்க முடியும்.

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி தாக்கல்செய்யும் அறிக்கையை நாங்கள் ஏற்கப்போவதில்லை என்றும், அது பிரதமர் மோடி எனும் காவல்காரரின் கணக்கு தணிக்கையாளர் தாக்கல்செய்யும் அறிக்கை.
இவ்வாறு ராகுல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேரம் பேசியுள்ளதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

ராகுலின்பேட்டிக்கு பதிலடி கொடுத்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடிக்கு எதிராக ரஃபேல் போர்விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு வெட்கமற்ற ஒன்றாகும். பொறுப்பற்றதனத்தின் உச்சம். ஐரோப்பிய விமானதயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்ஸின் மின்அஞ்சல் பரிமாற்றங்கள் குறித்த தகவல்களை ராகுல் காந்தி கையில் வைத்து பேசுகிறார்.
ஒரு நிறுவனத்தின் உள்நிர்வாகம் தொடர்பான மின்அஞ்சல் நகல் ராகுல்காந்திக்கு கிடைத்துள்ளது என்றால், வெளிநாட்டு நிறுவனங்களுடன் ராகுல்காந்தி பேரம் பேசியுள்ளது தெளிவாகத் தெரிய வருகிறது.

பிரதமர் மோடி ராஜதுரோகம் செய்துவிட்டார் என்று ராகுல் கூறியுள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இந்திராகாந்தி குடும்பத்தில் வந்த பிரதமர்களுடன் எங்கள் தலைவர்களுக்கு கூட பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் நாங்கள் ஒருபோதும் யாரையும் ராஜ துரோகம் என்று குற்றம்சாட்டியதில்லை.
இந்த குற்றச்சாட்டினால் ராகுல்காந்தி தன் முகத்தில் தானே சேற்றை பூசிக்கொண்டுள்ளார்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.