தீவிரவாதிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும்

ஜம்மூ- காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில், தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து இன்று பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்த காரியத்தைச் செய்தவர்கள் மகிப் பெரிய தவறிழைத்துள்ளார்கள்’ என்று எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளார்.
புல்வாமா மாவட்டத்தின் கோரிபோரா பகுதியில் துணை ராணுவத்தினரின் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் தனது காரில் 350 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களுடன், ரிசர்வ் போலீஸ் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதினார்.

இதில் பேருந்து வெடித்துச் சிதறியதில் ஏராளமான வீரர்கள் உயிரிழந்தனர். முதலில் 8 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியானது. பின்னர் 10, 12, 25 என அதிகரித்து தற்போது 40 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி பேசியுள்ள மோடி, ‘இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் தீவிரவாதிகள் மிகப் பெரிய தவறு செய்துள்ளார்கள். அவர்கள் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருந்தாலும் அவர்கள் நீதிக்கு முன்னர் நிறுத்தப்படுவர்.

இந்தச் சம்பவத்தை கேள்விபட்டதில் இருந்து அனைவரது ரத்தமும் கொதிக்கிறது என்பதை நான் அறிவேன். மிகவும் உணர்ச்சிவயப்படக் கூடிய நேரமிது. அளும் அரசாங்கமோ, எதிர்கட்சியோ இந்த விஷயத்தில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நம் நாடு ஒற்றுமையாக இருக்கிறது. ஆனால், நமது அண்டை நாடு, நம் தேசத்தை குலைக்கலாமல் என்று நினைத்தால், அது எப்போதும் நிறைவேறாது’ என்று கொதிப்புடன் பேசினார். மூத்த மத்திய அமைச்சர்களுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கலந்துரையாடியதை அடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் பிரதமர் மோடி.

முன்னதாக அருண் ஜெட்லி பேசுகையில், ‘இந்த சம்பவத்துக்குக் காரணமான பாகிஸ்தான் தனித்துவிடப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். இந்த காரியத்தில் ஈடுபட்ட மற்றும் அதற்கு துணை போன அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்’ என்று உஷ்ணமாக கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...