நமது ராஜீய வெற்றி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில், நாட்டுமக்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளதாக, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

மத்தியபிரதேச மாநிலம் ஷாடோல் பகுதியில், பா.ஜ., சார்பிலான வாகனப் பேரணியை, அமித் ஷா துவக்கிவைத்தார். அவரும் ஹெல்மெட் அணிந்தவாறு இரு சக்கர வாகனத்திலும் பயணித்தார். பின் பத்திரிகை யாளர்களை சந்தித்த அமித் ஷா கூறியதாவது;

பிரதமர் மோடி ஆட்சியில், மக்கள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு, மக்களின் நலனில் ஒரு போதும் அவக்கறை கொண்ட தில்லை. பாகிஸ்தான் உடனான விகாரங்களில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நடவடிக்கைகள், மக்களுக்கு ஒரு போதும் திருப்திகரமாக இருந்ததில்லை இவ்வாறு அவர் கூறினார்.

நாடுவிடுதலை அடைந்ததில் இருந்து, பயங்கரவாதிகளை கையாள்வதில் நமது அரசு எடுத்துள்ள நடவடிக்கையே சிறப்பானது என்று நம்பிக்கை கொண்டுள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் எண்ணற்ற பயங்கரவாதிகள் கொல்ல பட்டுள்ளனர்.

புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஒருமுறையாவது விமர்சித்திருக்க வேண்டும். இதைச்செய்யாத அவரிடம் இருந்து எப்படி நாம் எதையும் எதிர்பார்க்க முடியும்? அவரை எப்படி நம்புவது? பாகிஸ்தானில் சூழ்நிலை அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்திருக்கலாம். இருப்பினும் உதட்டள விலாது அவர் விமர்சித்திருக்க வேண்டும்.

அபிநந்தனை குறுகிய காலத்துக்குள்ளாக விடுதலை செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியது, நமது ராஜீய வெற்றியாகும்.
பயங்கரவாதத்தை துளியும் பொறுப் பதில்லை என்ற கொள்கையை செயல்படுத்தும் துணிவும், அரசியல் பலமும் மோடி அரசுக்கு உள்ளது என்ற செய்தி அவர்களை (பாகிஸ்தான்) சென்றடைந் திருக்கும் .

இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றுக் கூறிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, அமித் ஷா விமர்சித்தார். பயங்கரவாதத்தைத் தூண்டி விடக் கூடிய நாட்டுடன் இந்தியாவை எப்படி ஒப்பிடலாம்? என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...