ரிஷி கேசில் 900 கி.மீ தூரத்திற்கு பூகம்பங்களையும் தாங்கு சாலை

மோடி அரசு இமயமலையில் தேவ பூமியான ரிஷி கேசில் இருந்து பத்ரிநாத் வரை மலைகளை குடைந்து சுமார் 900 கிலோ மீட்டர் தூரத்திற்கு பூகம்பங்களையும் தாங்கும் வகையில் அமைக்க போகும் இருவழி சாலைகள் தான் மிக முக்கியமானது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் இந்துக்கள் மேற்கொள்ளும் சார்தாம் யாத்திரையை ஊக்குவிக்க ரிசிகேசில் இருந்து இந்தியாவின் கடைசிகிராமமான மானா வரைக்கும் அனைத்து சீதோசன நிலைகளையும் தாங்கும் வண்ணம் சுமார் தொள்ளாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழி சாலைகளை பன்னிரெண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ளனர். மூன்று வருடங்களுக்கு முன் உத்தரகாண்ட்டில் பெய்த கனமழையினால் வெள்ளம் வந்த பொழுது இந்தசார் தாம் யாத்திரைக்கு வந்தபக்தர்கள் ஐந்தாயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் நிலச் சரிவில் சிக்கி இறந்து போனார்கள் அல்லவா. அந்த நிலை மீண்டும் வரக்கூடாது என்று மோடி அரசு நினைத்து அதற்க்கான செயல் திட்டங்களில் இறங்கியது.

இதற்காக பதிமூன்று பைபாஸ் ரோடுகளை மறுசீரமைத்து இரண்டு சுரங்கப் பாதைகளை அமைத்து இருபத்தஞ்சு பாலங்களை உருவாக்கி மூன்று மேம்பாலங்களை கட்டி நூற்றி ஐம்பது நான்கு பஸ் நிறுத்தங்களை ஏற்படுத்தி மக்களின் யாத்திரை பயணத்தை பாதுகாப் பாக்கி இமயமலை எங்கும் பதினோராயிரம் அடி உயரத்தில் ஹர ஹர மகாதேவா என்கிற மனித உயிரின் ஆத்மஒலியை ஒலிக்க இருக்கிறது மோடி அரசு. ஏழுபகுதிகளாக நடைபெறும் இந்த வேலை இன்னும் மூன்று ஆண்டுகளில் முடிந்து விடும்.

இந்துக்களின் புண்ணிய பூமி தனுஸ் கோடியில் புயலினால் அழிந்து ஐம்பத்தியிரண்டு வருடங்களுக்கு பிறகு மோடி ஆட்சியில்தான் ரோடு போடப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நான்கு வழிசாலை திட்டம் இந்த வருடம் தான் ஆரம்பிக்கப்பட்டு பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்டது.

இதெல்லாம் விட உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்படுத்தப் போகும் பேரிடரிலும் அழியாத இரு வழிச்சாலை அது தாங்க மோடி அரசின் மாஸ்டர் பீஸ் என்று சொன்னால் மிகையாது. கடும் பனி சூழ்ந்த மலைகளை குடைந்து சுரங்கம் உருவாக்கி மேம்பாலம் கட்டி அதுவும் பூகம்பம் நிகழ வாய்ப்புள்ள பகுதியான அங்கே பத்தாயிரம் அடி உயரத்தில் அனைத்து பேரிடர்களையும் தாங்கக்கூடிய இரு வழி சாலைகளை அமைக்க இருப்பது சாமானிய வேலையா? சொல்லுங்கள்.

இந்த இமயமலையில் இந்துக்கள் மேற் கொள்ளும் சார் தாம் யாத்திரை மிக புகழ் பெற்றது. இந்த சோட்டா சார் தாம் யாத்திரை உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைத் தொடரில் உள்ள யமுனோத்ரி கங்கோத்ரி,கேதார் நாத்,பத்ரிநாத் என்ற நான்கு புண்ணிய ஸ்தலங்களுக்கு பயணம் செய்வதையே உத்தரகாண்ட் யாத்திரை அல்லது சோட்டா சார்தாம் யாத்திரை என்று சொல்கிறார்கள். இந்துக்களின் மிக முக்கியமான யாத்திரை சார்தாம் யாத்திரையாகும். இந்த சார்தாம் யாத்திரை யில் இரண்டு உள்ளது. ஒன்று தெற்கே ராமனாதரையும் மேற்கே துவாரக நாதரையும் வடக்கே பத்ரிநாதரையும் கிழக்கே ஜெகனாதரையும் ஒரே நேரத்தில் சென்று தரிசிப்பதே சார்தாம் யாத்திரையாகும். இந்த யாத்திரையை ஓவ்வொரு இந்துவும் தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும் என்று இந்து தர்மம் சொல்கிறது. இது தான் பெரிய சார்தாம் யாத்திரையாகும். இதே மாதிரி வட இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் ஒரு சார் தாம் யாத்திரை உண்டு இதற்கு பெயர் சோட்டா சார்தாம் யாத்திரை யாகும். இந்த யாத்திரையில் ஆதி சங்கரர் சுமார் ஆயிரத்தி எட்டுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே சென்றுள்ளார்.

இந்த சார்தாம் யாத்திரையில் முதலில் உள்ள யமுனோத்ரி கோயில் யமுனை நதி உற்பத்தியாகி வரும் இடத்தில் உள்ளது. இந்த யமுனை நதியில் தான் கண்ணன் பால பருவத்தில் தனது லீலைகளை செய்து மகிழ்ந்தான். கண்ணனின் பாதம் பட்டு புண்ணியம் அடைந்த யமுனை ஆறு அந்த கிருஷ்ணனின் நிறமான கருப்பு வண்ணமாகவே உள்ளாள். கடலில் நேராக கலக்காத புண்ணிய நதி யமுனை நதியாகும். யமுனோத்ரி ஆலயம் கடல் மட்டத்திலிருந்து மூவாரத்தி இருநூத்தி தொன்னுத்தி மூன்று மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

அடுத்து கங்கோத்ரி கடல் மட்டத்தில் இருந்து மூவாயிரத்தி நானுத்தி பதினைந்து மீட்டர்உயரத்தில் அமைந்துள்ளது. கங்கோத்ரி கோயில் தான் கங்கை பூவுலகை முதலில் தொட்ட இடம். இந்த கோயில் பகீரதன் காலை ஊன்றி கங்கையை பூமிக்கு வர வேண்டி தவம் செய்த இடத்தில் தான் அமைந்துள் ளது. இங்கு தான் பாண்டவர்கள் அசுவமேதயாகம் செய்ததாக கங்கோத்ரி வரலாறு சொல்கிறது.

அடுத்து கேதார்நாத் ஆலயம் திருஞானசம்பந்தராலும், சுந்தரராலும் தேவாரபதிகம் பாடப்பட்ட தலம் இது. அத்தோடு பாரததேச மெங்கும் அமைந்துள்ள பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்று இந்த கேதாரீஸ்வரர் தான். கடல் மட்டத்திலிருந்து மூவாயிரத்து ஐநூத்தி ஐம்பத்தி மூன்று மீட்டர் உயரத்தில் பனிமூடிய சிகரங்களுக்கு நடுவில் மந்தாங்கினி ஆற்றின் உற்பத்தி ஸ்தானத்தில் ருத்ர இமய மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு தான் ஆதிசங்கரர் தன்னுடைய உடலை விட்டு ஆத்மாவை மட்டும் எடுத்து சென்று பரமேஸ்வரனை தரிசித்து பஞ்ச லிங்கத்தை வாங்கி வந்த இடம் உள்ளது. பரசு ராமர் வழிபட்ட தலம் இது.

அடுத்து கடல் மட்டத்திலிருந்து மூவாயிரத்து நூறூ மீட்டர் உயரத்தில் நரநாராயண சிகரங்களுக்கிடையில் அலக்நந்தா ஆற்றின் வலக்கரையில் பத்ரிநாத் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நூத்தி எட்டு திவ்யதேசங்களுள் பத்ரிநாத்தும் ஒன்று இங்கே ஆதி சங்கரருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு தான் வியாசர் குகை விநாயகர் மகாபாரதம் வடித்தது போன்ற இந்து தர்மத்தின் ஆதார சம்பவங்கள்அரங்கேறிய இடங்கள் உள்ளது.

இப்படி இந்துக்களின் வாழ்வில் புண்ணியம் சேர்க்கும் இந்த இடங்களுக்கு மே மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை தான் மக்கள் யாத்திரை செல்வார்கள். ஒருவருட யாத்திரியில் குறைந்தது முப்பது லட்சத்திற்கும் மேலாக மக்கள் சென்று கொண்டிருக்கும் இந்த புனித யாத்திரையை மேம்படுத்துவதே ஒரு உன்னதமான அரசின் நோக்கமாக இருக்க முடியும். இதை தான் மோடி அரசு செய்து வருகிறது.
படித்ததில் பிடித்தது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...