குமாரசாமி பதவி விலக வேண்டும்

ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநில பொதுச் செயலர் அரவிந்த்லிம்பாவளி தெரிவித்தார்.
பாஜக சட்டப்பேரவைக் குழுக்கூட்டம் குழுவின் தலைவர் எடியூரப்பாவின் தலைமையில் பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள் கிழமை நடந்தது.  கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளிட்ட பாஜகவின் எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவுகள் குறித்து பாஜக மாநில பொதுச் செயலர் அரவிந்த் லிம்பாவளி கூறியது:-

கர்நாடகத்தில் எழுந்துள்ள அரசியல் சூழ்நிலைகுறித்து விவாதிக்கப் பட்டது. கூட்டணி கட்சிகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக, கூட்டணி அரசுதானாகவே கவிழும் நிலையை அடைந்துள்ளது என்ற கருத்து பொதுவாக அனைத்து எம்எல்ஏ.,க்களாலும் கூறப்பட்டது.

கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக எதுவும் செய்ய வில்லை. ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,க்களை இழுக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ், மஜத கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. பாஜக மீது முன்னாள் முதல்வர் சித்தராமையா சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் எள்ளளவும் உண்மையில்லை. இக்குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. 13 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்கள் மீது பேரவைத் தலைவர் எடுக்கும் நடவடிக்கையில் எங்களது பங்களிப்பு எதுவுமில்லை.

காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் பதவிவிலகியுள்ளதை தொடர்ந்து, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து சிறுபான்மை அரசாகியுள்ளது. எனவே, முதல்வர் குமாரசாமி தனதுபதவியை ராஜிநாமா செய்யவேண்டும். குமாரசாமியின் ராஜிநாமாவை கேட்டு மாவட்ட தலைநகரங்களில் செவ்வாய்க் கிழமை (ஜூலை 9) போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தார்மீக அடிப்படையில் ஆட்சியில் நீடிக்கும் அருகதையை இந்த அரசு இழந்துள்ளது.

பாஜக சட்டப் பேரவைக் குழுவின் கூட்டம் மீண்டும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) மாலை 5 மணிக்கு நடக்கிறது. அக்கூட்டத்தில் அரசியல் நிலவரங்கள்குறித்து மீண்டும் விவாதித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவுசெய்வோம்.

சுயேச்சை எம்எல்ஏக்கள் எச்.நாகேஷ், ஆர்.சங்கர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்றார் அவர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...