மக்களின் தீர்ப்பு நிறைவேற்றபட்டு இருக்கிறது

பா.ஜ.க  மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தூத்துக்குடி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகாவில் குமாரசாமியின் காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருக்கிறது. மக்களின் தீர்ப்பு நிறைவேற்றபட்டு இருக்கிறது. மக்கள் பா.ஜ.க.,வுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். ஆனால் மிககுறைந்த இடங்களை பெற்ற குமாரசாமி கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது.

தற்போது மக்கள் எந்த ஆட்சி அமையவேண்டும் என்று நினைக்கிறார்களோ அது நடந்து இருக்கிறது. கர்நாடகாவில் தாமரை மலரும் போது தென் தமிழகத்தில் உள்ள மற்ற மாநிலங்களிலும் பா.ஜ.க  வலுப்பெறும்.

தமிழை நாங்கள்தான் காப்பாற்றி வருகிறோம் என்று மு.க.ஸ்டாலின் சொல்லிவருகிறார். இது தமிழ்தாய்க்கு பொறுக்காது. தமிழை யாரும் காப்பாற்றவேண்டிய அவசியம் இல்லை. தமிழ் ஒரு முதுமொழி. என்றும் இளமையான மொழி.

இந்தியை மத்திய அரசு திணிக்கவேண்டிய அவசியம் இல்லை. தபால்துறை, ரெயில்வே துறையிலும் இந்தியை திணிக்க வேண்டிய எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. தமிழின் பெருமையை போற்றுவதில் பா.ஜனதா முதன்மையான கட்சியாக இருக்கும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ஸ்டாலின்பெருமை டெல்லிக்கு தெரிகிறது. தமிழ்நாட்டுக்கு தெரியவில்லை என்று கூறிஇருக்கிறார். அவருடைய பெருமை ஜப்பான் மற்றும் சர்வதேசளவில் தெரிந்தால் சந்தோஷம்தான். ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் பற்றாக்குறை வருவதற்கு தி.மு.க. தான் காரணம்.

தமிழ்நாட்டில் பலமுறை ஆட்சியில் இருந்த திமுக. தண்ணீரை சேமிப்பதற்கான எந்த ஒரு தொலை நோக்கு பார்வையிலும் திட்டத்தை செய்ய வில்லை.

தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற கொலை சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தி.மு.க.வை சேர்ந்தவர்களின் 2-வது கொலை இது. மாணவர்கள், பொது மக்கள் பயணிக்கும் பேருந்தில் கத்தியுடன் சண்டைபோட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதை காவல்துறை தடுக்கவேண்டும் என்றார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.