உலக வங்கியிடம் பிச்சை எடுத்த காங்கிரஸ் பேசலாமா

ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் கூடுதல் இருப்புத்தொகையை அரசிடம் தரப்போவதாக சொல்கிறது! இருப்புத்தொகை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு இருக்கவேண்டும்! அந்த அளவையும் தாண்டி கூடுதலாக இருப்பதுதான் கூடுதல் இருப்புத்தொகை 1.76 லட்சம் கோடி! இந்த தொகை ரிசர்வ் வங்கி ஈட்டிய லாபம் என்று சொல்லலாம்!

ரிசர்வ் வங்கி, பாஜக அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து வட்டி விகிதங்களை பெருமளவு குறைத்தது! எனினும் லாபம் அதிகமாக ஈட்டியுள்ளது! லாபம் அதிகமாக ஈட்டியுள்ளது என்றால், நாட்டில் தொழில் வளமும் உற்பத்தியும் வியாபாரமும் பண புழக்கமும் சிறப்பாக இருக்கிறது என்றுதான் பொருள்! கூடுதல் இருப்புத்தொகை இருக்கிறது, அது வங்கிக்கு தேவையற்றதாக, அதிக இருப்பாக இருக்கிறது! அதை நாங்கள் அரசுக்கு தந்துவிடுகிறோம் என்கிறது ரிசர்வ் வங்கி!

இந்த தொகையை தாருங்கள் என்று அரசு கேட்கவில்லை! வங்கிதான் ஒரு குழுவைப் போட்டு ஆய்வு நடத்தி இவ்வளவு தொகை அதிகமாக இருப்பதை அரசிடம் தந்துவிடலாம் என முடிவெடுத்திருக்கிறது!

அரசு இந்த ரிசர்வங்கியின் முடிவுக்கு பதில் எதுவும் இதுவரை சொல்லவில்லை!

அரசு இந்த தொகையை ஏற்கலாம், அல்லது அது வங்கியிடமே இருக்கட்டும், பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லலாம்!

ஆனால், இந்திய அரசின் சார்பில் பிச்சைவாங்கி உலகெங்கும் சுற்றித்திரிந்த காங்கிரஸ் காரர்கள், கடனே வாங்காமல் ஆட்சி நடத்தும் பாஜக அரசைப் பார்த்து, ரிசர்வ் வங்கியில் திருடுகிறார்கள்! என்கிறது!

ஒவ்வொரு வங்கியாக திருடிய காங்கிரஸ் கூட்டத்திற்கு அந்த “திருடி” என்ற வார்த்தைத்தான் வாயில் வரும்!

காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, உலகெங்கும் கடன் வாங்கினார்கள்! பாஜக கடனே வாங்கவில்லை!

காங்கிரஸ் காரர்கள் ஆட்சியில் இருந்தபோது அனைத்து வங்கிகளிலும் நிதி மோசடி செய்தார்கள்! பாஜக ஊழலற்ற ஆட்சி நடத்துகிறது!

காங்கிரசின் நிதி அமைச்சர் தனது வீட்டுக்காக பணம் திருடிய வழக்கை சந்தித்துக்கொண்டிருக்கிறார்!

அதிகமாக இருக்கும் இருப்புத்தொகையை ரிசர்வங்கி அரசிடம் கொடுக்காமல் தங்களிடம் கொடுக்கவேண்டும் என்றா காங்கிரஸ் காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்? அல்லது ஆற்றில் போட வேண்டுமா?

ரிசர்வ் வங்கி லாபமாக ஈட்டியிருப்பதாக சொல்லும் அதிக இருப்பு வெறும் 1.76 லட்சம் கோடிதான்! ஆனால் ஏழை இந்தியர்களுக்கு தொழில் துவங்க வியாபாரம் செய்ய பாஜக அரசு ஜாமீனோ அடமானமோ இல்லாத முத்ரா வங்கி கடனுக்காக மட்டும், கடந்த 5 ஆண்டுகளாக 7 லட்சம் கோடியை ஒதுக்கியிருக்கிறது! 15 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்துள்ளார்கள்! தமிழகத்தில் மட்டும் ஒரு கோடியே அறுபது லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயனடைந்துள்ளார்கள்!

7 லட்சம் கோடி! 10 லட்சம் கோடி! 15 லட்சம் கோடி! என மக்கள் நலனுக்காக செலவு செய்துக்கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசுக்கு, இந்த ரிசர்வ் வங்கி தருவதாக சொல்லும் 1.67 லட்சம் கோடி ரூபாய் மிக சிறிய அளவே!

நாடுகள் தோறும் பிச்சை எடுத்து நாட்டை கடன்கார நாடாக மாற்றிய காங்கிரஸ் கட்சிக்கு, இதில் கருத்து சொல்ல அருகதையே இல்லை!

நன்றி – குமரிகிருஷ்ணன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...