தமிழகத்தின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவோம்

அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டுள்ளதை யடுத்து, செப்டம்பர் 1 முதல் “ஒரே தேசம், ஒரே அரசியலமைப்புச் சட்டம்” பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் சனிக்கிழமை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரை “ஒரே தேசம், ஒரே அரசியலமைப்பு சட்டம்” என்கிற பிரசாரத்தை பாஜக மேற்கொள்ளவுள்ளது. ஒருமாதம் நடைபெறவுள்ள இந்த பிரசாரத்தின்போது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதற்கான முடிவில் இருக்கும்,  மத்திய அரசின் நிலைப்பாடு, வாதங்கள் உள்ளிட்டவற்றை மக்களிடம்கொண்டு சேர்க்கவுள்ளோம். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்ய திட்டமிட்டுள்ளோம்.

நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2000 பேரை கட்சித்தலைவர்கள் சந்திக்கவுள்ளனர். அவர்களிடம் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கான நோக்கம் விளக்கப்படும். அவர்கள், அவர்களது பகுதியில் இருக்கும் மக்களிடம் இது குறித்து எடுத்துரைப்பார்கள்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநடவடிக்கை முழுக்க முழுக்க சட்டரீதியாகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டும்தான் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, நாங்கள் தமிழகத்தின் அனைத்து மூலையிலும் உள்ள மக்களை சென்றடைவோம் என்று திமுகவுக்கு சவால்விடுக்கிறோம்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பட்டியலின மக்களால் இடஒதுக்கீடு பலன்களை அனுபவிக்க முடியவில்லை. தமிழகத்தில் இருக்கும் மக்கள் பலன்பெறுவதுபோல் காஷ்மீர் மக்களும் பலன் அடைய வேண்டும். ஜம்மு-காஷ்மீர் பெண்கள் மற்றமாநில ஆண்களைத் திருமணம் செய்துகொண்டால், அவர்கள் தங்களது உரிமைகளை இழக்கநேரிடும். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயகம், நல்லாட்சி, இட ஒதுக்கீடு உள்ளிட்டவை தேவைப்படுகிறது.

நீண்டகாலமாக பாஜக எதிர்க்கட்சியாக இருந்துள்ளது. ஆனால், இந்தியா போரில் ஈடுபட்டிருக்கும் போது நாங்கள் எந்த கருத்தும் கூறியதில்லை. காங்கிரஸ் தலைவர்கள் கூறியகருத்தை பாகிஸ்தான் ஐ.நா. வில்  இந்தியாவுக்கு எதிரான தீர்மானத்தில் பயன் படுத்தியுள்ளது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...