கல்விக்குச் சமமாக உடற்கல்வியை மேம்படுத்துவது அவசியம்

கல்விக்குச் சமமான அளவில் உடற்கல்வியை மேம்படுத்துவது அவசியம், குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த முழுமையான கல்வியளிப்பது அவசியமாகும். தேசவளர்ச்சியை கட்டமைப்பவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் குழந்தைகளிடம் ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம், நீதி, மதச் சார்பின்மை, மற்றவர்களின் நலன், மனித கண்ணியம், மனித உரிமைகளை மதிப்பது ஆகிய மதிப்பீடுகளை வளர்த்தெடுக்க வேண்டும். சிறந்த ஆசிரியர்களாக நடந்து கொள்வது தான் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாதிருஷ்ணனுக்கு புகழஞ்சலி செலுத்தும் வழியாகும்.

பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளிடம் கலந்துரையாடும்போது, குழந்தைகளின் பலம், பலவீனம், மனம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் புகழ்மிக்க வரலாறு, செறிந்த பாரம்பரியம், மரபுகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவது அவசியம். நீடித்தவளர்ச்சி, இயற்கையுடன் வாழ்தல் ஆகிய கருத்தாக்கத்தையும் போதனையில் இடம் பெறச் செய்யவேண்டும். கல்விக்குச் சமமாக உடற்கல்வியையும் ஊக்குவிப்பது அவசியமாகும்.

விளையாட்டுகளிலும், யோகாவிலும் மாணவர்கள் ஈடுபட ஊக்குவிக்கவேண்டும். வீடுகளில் குழந்தைகள் தங்களது தாய்மொழியில் பேசுவதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஊக்குவிக்க வேண்டும். ஆரம்பப்பள்ளிகளில் தாய்மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதேவேளையில், இயன்ற வரையில் பல மொழிகளைப் பயிலவேண்டும். புதிய மொழிகளைப் பயில்வதில் தயக்கம் கூடாது. எந்த மொழியையும் திணிக்கக்கூடாது; எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது. கல்வித் தளத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர அர்ப்பணிப்பு, நம்பிக்கை, தகுதியுடன்கூடிய ஆசிரியர்கள் நாட்டின் தேவையாக உள்ளது. தங்களது அறிவு, மனப்பான்மை, நடத்தை மூலம் அதிர்வுமிக்க தேசத்தின் அடித்தளத்தை உருவாக்கும் தனித்துவ மிக்க வாய்ப்பு ஆசிரியர்களிடம் உள்ளது .

குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...