கல்விக்குச் சமமாக உடற்கல்வியை மேம்படுத்துவது அவசியம்

கல்விக்குச் சமமான அளவில் உடற்கல்வியை மேம்படுத்துவது அவசியம், குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த முழுமையான கல்வியளிப்பது அவசியமாகும். தேசவளர்ச்சியை கட்டமைப்பவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் குழந்தைகளிடம் ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம், நீதி, மதச் சார்பின்மை, மற்றவர்களின் நலன், மனித கண்ணியம், மனித உரிமைகளை மதிப்பது ஆகிய மதிப்பீடுகளை வளர்த்தெடுக்க வேண்டும். சிறந்த ஆசிரியர்களாக நடந்து கொள்வது தான் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாதிருஷ்ணனுக்கு புகழஞ்சலி செலுத்தும் வழியாகும்.

பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளிடம் கலந்துரையாடும்போது, குழந்தைகளின் பலம், பலவீனம், மனம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் புகழ்மிக்க வரலாறு, செறிந்த பாரம்பரியம், மரபுகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவது அவசியம். நீடித்தவளர்ச்சி, இயற்கையுடன் வாழ்தல் ஆகிய கருத்தாக்கத்தையும் போதனையில் இடம் பெறச் செய்யவேண்டும். கல்விக்குச் சமமாக உடற்கல்வியையும் ஊக்குவிப்பது அவசியமாகும்.

விளையாட்டுகளிலும், யோகாவிலும் மாணவர்கள் ஈடுபட ஊக்குவிக்கவேண்டும். வீடுகளில் குழந்தைகள் தங்களது தாய்மொழியில் பேசுவதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஊக்குவிக்க வேண்டும். ஆரம்பப்பள்ளிகளில் தாய்மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதேவேளையில், இயன்ற வரையில் பல மொழிகளைப் பயிலவேண்டும். புதிய மொழிகளைப் பயில்வதில் தயக்கம் கூடாது. எந்த மொழியையும் திணிக்கக்கூடாது; எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது. கல்வித் தளத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர அர்ப்பணிப்பு, நம்பிக்கை, தகுதியுடன்கூடிய ஆசிரியர்கள் நாட்டின் தேவையாக உள்ளது. தங்களது அறிவு, மனப்பான்மை, நடத்தை மூலம் அதிர்வுமிக்க தேசத்தின் அடித்தளத்தை உருவாக்கும் தனித்துவ மிக்க வாய்ப்பு ஆசிரியர்களிடம் உள்ளது .

குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...