கல்விக்குச் சமமாக உடற்கல்வியை மேம்படுத்துவது அவசியம்

கல்விக்குச் சமமான அளவில் உடற்கல்வியை மேம்படுத்துவது அவசியம், குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த முழுமையான கல்வியளிப்பது அவசியமாகும். தேசவளர்ச்சியை கட்டமைப்பவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர். அவர்கள் குழந்தைகளிடம் ஜனநாயகம், சமத்துவம், சுதந்திரம், நீதி, மதச் சார்பின்மை, மற்றவர்களின் நலன், மனித கண்ணியம், மனித உரிமைகளை மதிப்பது ஆகிய மதிப்பீடுகளை வளர்த்தெடுக்க வேண்டும். சிறந்த ஆசிரியர்களாக நடந்து கொள்வது தான் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாதிருஷ்ணனுக்கு புகழஞ்சலி செலுத்தும் வழியாகும்.

பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளிடம் கலந்துரையாடும்போது, குழந்தைகளின் பலம், பலவீனம், மனம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் புகழ்மிக்க வரலாறு, செறிந்த பாரம்பரியம், மரபுகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவது அவசியம். நீடித்தவளர்ச்சி, இயற்கையுடன் வாழ்தல் ஆகிய கருத்தாக்கத்தையும் போதனையில் இடம் பெறச் செய்யவேண்டும். கல்விக்குச் சமமாக உடற்கல்வியையும் ஊக்குவிப்பது அவசியமாகும்.

விளையாட்டுகளிலும், யோகாவிலும் மாணவர்கள் ஈடுபட ஊக்குவிக்கவேண்டும். வீடுகளில் குழந்தைகள் தங்களது தாய்மொழியில் பேசுவதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஊக்குவிக்க வேண்டும். ஆரம்பப்பள்ளிகளில் தாய்மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதேவேளையில், இயன்ற வரையில் பல மொழிகளைப் பயிலவேண்டும். புதிய மொழிகளைப் பயில்வதில் தயக்கம் கூடாது. எந்த மொழியையும் திணிக்கக்கூடாது; எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது. கல்வித் தளத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர அர்ப்பணிப்பு, நம்பிக்கை, தகுதியுடன்கூடிய ஆசிரியர்கள் நாட்டின் தேவையாக உள்ளது. தங்களது அறிவு, மனப்பான்மை, நடத்தை மூலம் அதிர்வுமிக்க தேசத்தின் அடித்தளத்தை உருவாக்கும் தனித்துவ மிக்க வாய்ப்பு ஆசிரியர்களிடம் உள்ளது .

குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...