பாஜக மற்றும் சிவசேனா இடையே தொகுதிபங்கீட்டில் உடன்பாடு

மராட்டிய மாநில தேர்தலில் பாஜக  மற்றும் சிவசேனா இடையே தொகுதிபங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, முதல்வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கடந்த சில தினங்களாக நீடித்துவந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு 21ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற்று 24ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த சிலநாட்களாக தொகுதிப் பங்கீடு செய்வதில், பாஜக–சிவசேனா இடையே இழுபறி நீடித்து வந்தது. தற்போது, இழுபறி முடிவுக்கு வந்ததை அடுத்து, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜகவுக்கு 125 தொகுதிகளும், சிவசேனாவுக்கு 124 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எஞ்சியதொகுதிகள் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 125 தொகுதிகளுக்கான வேட்பாளர்பட்டியல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ், நாக்பூர் தென்மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மராட்டிய மாநில பாஜக தலைவர் சந்திர காந்த் பாட்டீல், கொத்ரட் தொகுதியில் போட்டியிடுகிறார். உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ள 124 தொகுதிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, மும்பை வோர்லிதொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலில், லோக்மண்ய திலக் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜின் குடும்ப உறுப்பினர்களையும் பரிந்துரைத் துள்ளது.

மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான குடியரசுகட்சி, ராஷ்டிரிய சமாஜ் பக்ஷ், சிவ சங்க்ரம் சங்கத்னா மற்றும் ராயத் கிரந்தி சேனா ஆகிய கட்சிகளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது கடந்த 2014ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும் சிவசானாவும் தனித்தனியாக போட்டியிட்டன. இதில் பாஜக 122 இடங்களையும் சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.