வரி சீர்திருத்தங்கள் செய்ய இந்தியா தயார்

பிரான்ஸ் சென்றுள்ள ராஜ்நாத்சிங்,  அந்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் அதிபர்களை  சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இந்தியாவில் உற்பத்தி ஆலைகள் அமைத்து ராணுவ தளவாடங்களை தயாரிக்கு மாறும், அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.இதேபோல் பிரான்ஸ் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இந்தியாவில் எளிதாக தொழில்செய்யும் வண்ணம் சிறப்பான வணிக சூழலை உருவாக்குமாறு பிரான்ஸ் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்கும் வகையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு தளங்களை இந்தியாவில் நிறுவ ஆர்வமாக உள்ளதாகவும், எனவே வரி விதிப்பு போன்ற வணிகத் தடைகள் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்  என்றும் சஃப்ரான் ஏர்கிராஃப்ட் சார்பில் கோரிக்கை விடுக்கபட்டது.

இதைக் கேட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், மோடி தலைமையிலான அரசு, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்தசூழலை உருவாக்குவதற்காக சீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி முனையங்கள் உருவாக்க பட்டுள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

செய்தியாளர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது: பிரான்ஸ் ராணுவ அமைச்சருடன் நடத்தியபேச்சு, பயனுள்ள வகையில் இருந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, மேலும் பலமாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான ராணுவ ரீதியிலான அனைத்து விஷயங்களையும், மறு ஆய்வு செய்யவும், ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தவும், இந்த சந்திப்பு உதவும். ரபேல் போர் விமானங்களில், முதல் கட்டமாக, 18 விமானங்கள், வரும், 2021 பிப்ரவரிக்குள், இந்தியா வந்து விடும். மீதமுள்ள விமானங்கள், 2022 மே மாதத்துக்குள் வந்துவிடும். இவ்வாறு, அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...