பாஜக கூட்டணியில் நீடிப்பது அவசியம்- சிவசேனா

மகாராஷ்டிராத்தில் சட்ட சபை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் ஆகியும் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில்கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அப்போது சிவசேனாவுடன் விரைவில் கூட்டணி ஆட்சிஅமையும் என அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

இந்தநிலையில் சிவசேனா தனது பிடிவாதத்தில் இருந்து பின் வாங்கி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய்ராவத் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா கூட்டணியில் நாங்கள் நீடிப்பது அவசியமானது. ஆனால் எங்களுக்கான மரியாதை முக்கியம். தனிப் பட்ட நபர்கள் முக்கியம் அல்ல. மாநிலநலனே முக்கியம். இதனை மனதில்கொண்டு, அமைதியான முறையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டி உள்ளது. ஆட்சி அமைப்பதில் தாமதம் செய்துவருவதால், சிவசேனா எம்எல்ஏ.க்கள் கட்சியைவிட்டு விலகிசென்று விடுவார்கள் என்று கூறப்படுவது தவறு.

என்று அவர் பேசினார். இதையடுத்து நிருபர்களிடம்  சிவசேனாவை சேர்ந்த  சஞ்சய் ராவத் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஆட்சியில் சமபங்கு கேட்பதில் சிவசேனா பிடிவாதபோக்கு காட்டுகிறதா?

பதில்:- நீங்கள்தான் அப்படி கூறுகிறீர்கள். ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டதை செயல்படுத்த வேண்டும் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.

கேள்வி:- சட்ட சபை பாரதீய ஜனதா தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டு உள்ளாரே?.

பதில்:- அவரை வாழ்த்துவது கடமை. 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற்றவர் முதல்மந்திரியாக பதவி ஏற்பார்.

கேள்வி:- சிவசேனாவுக்கு துணை முதல்-மந்திரி பதவி மற்றும் 13 மந்திரி பதவிகள் வழங்க பா.ஜனதா முன் வந்து இருப்பதாக கூறப்படுகிறதே?.

பதில்:- கணக்கு புத்தகத்துடன் நாங்கள் அமர்ந்து இருக்க வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...