பாஜக சிவசேனா சண்டை பெரிய பிரச்சனையாக முடியும்

: பாஜகவும் சிவசேனாவும் மாறிமாறி சண்டை போட்டால் அது இரண்டுகட்சிக்கும் பெரிய பிரச்சனையாக முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சிஅமைக்க 146 இடங்கள் தேவை. ஆனால் அங்கு சிவசேனா, பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் நேற்று எந்தகட்சியும் ஆட்சி அமைக்க முடியவில்லை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்களிலும் வென்றுள்ளது. ஆனால் நான்கு கட்சிகளுக்குள் கூட்டணி உடன்படிக்கை இன்னும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் சிவசேனா மற்றும் பாஜகவின் பிளவை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை.இதனால் அமைச்சர் நிதின்கட்கரி போன்ற முன்னணி தலைவர்கள் சிவசேனாவுடன்  சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் இந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தது. கடைசிவரை சிவசேனா மற்றும் பாஜக இடையே சமாதானம் ஏற்படவில்லை.

இது குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில், சுயநலம் மிகமோசமான விஷயம். அரசியலில் சுயநலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அரசியல்வாதிகள் மக்கள் இதை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

சுயநலம் தவறு என்று தெரிந்தும் சிலர் அதைவிடாமல் பிடித்து வைத்து இருப்பார்கள். அவர்கள் இப்படி சண்டை போட்டுகொண்டு இருக்ககூடாது. பாஜக மற்றும் சிவசேனா இப்படியே ஒருவிஷயத்திற்காக சண்டை போட்டால் அது இரண்டு பேருக்கும் பெரிய பிரச்சனையாக முடியும், என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...